நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு எதிரான கருத்துகள் எப்போதும் இருக்கத்தான் செய்யும். எல்லா நேரத்திலும் நீதிமன்றத்தின் முடிவு சரியானதாக இருக்காது. எதுவுமே இங்கு முற்றிலும் சரி என்றில்லை. எல்லா முடிவுகளுக்கும் ஆதரவானவர்களும் இருப்பார்கள், அதனை எதிர்ப்பவர்களும் இருப்பார்கள். அதுமாதிரிதான் ஞானவாபி மசூதி வழக்கிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.