india

img

வக்பு மசோதா அரசியலமைப்பை மீறிய கொடூர நோக்கம் கொண்டது! நாடாளுமன்றத்தில் சிபிஎம் கடும் எதிர்ப்பு

புதுதில்லி, ஆக. 9 - ‘ஒன்றிய அரசின் வக்பு (திருத்த) சட்ட மசோதா-2024’ வரம்பு மீறிய, சிறுபான்மை இஸ்லாமியர்களை பயமுறுத்தலிலேயே வைத்திருக்க வேண்டும்; சொத்துக்களை சூறையாட வேண்டும் என்ற கொடூர மான நோக்கத்தை பின்னணியாக கொண்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தங்களின் கடுமையான எதிர்ப்பை தெரி வித்துள்ளனர்.

இஸ்லாமிய மக்களின் நல னுக்கு எதிராக ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, வக்பு திருத்த சட்ட மசோதா- 2024ஐ வியாழனன்று மக்க ளவையில் தாக்கல் செய்த நிலை யில், அதற்கு அறிமுக நிலையி லேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பின ர்கள் கடும் எதிர்ப்பை முன்வைத்தனர்.

வக்பு திருத்தச் சட்ட மசோதா மீது மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக்குழுத் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் பேசினார்.

மாநில அரசுகளை ஆலோசிக்கவில்லை

அப்போது, “வக்பு (திருத்த) சட்டம் 2024-ஐ நான் கடுமையாக எதிர்க்கிறேன். ‘வேற்றுமையில் ஒற்றுமை’ எனும் நமது உன்னத மான நோக்கத்துக்கு இது எதி ரானது. நமது அரசியலமைப்பு சட்டம் உத்தரவாதம் அளிக்கும் மத வழிபாடு சுதந்திரத்தை இந்தச் சட்டத் திருத்தம் மீறிவிட்டது. நமது அர சியலமைப்பு சட்டத்தின் 25, 26, 27 மற்றும் 28 ஆகிய பிரிவுகளுக்கும் முர ணாக சட்டத் திருத்தம் உள்ளது” என்று சாடினார்.

அத்துடன், “இந்தச் சட்டத் திருத்தம் மூலம் வக்பு வாரியம் நியமன அமைப்பாக மாறிவிடும். இந்த சட்டத்தின் ஒரே நோக்கம் வக்பு சொத்துக்களை அழிப்பது என்பது தான்!” என்று குற்றம் சாட்டிய ராதா கிருஷ்ணன், “இந்தச் சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு முன்பு மாநில அரசாங்கங்களோடோ அல்லது முஸ்லிம் அமைப்புக ளோடோ கலந்து ஆலோசிக்கப்பட வில்லை” என்பதை விமர்சித்தார்.

“எனவே, இந்தச் சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும். இல்லை யெனில் பரவலான கலந்தாலோ சிப்புக்கு தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும்” என்று வலி யுறுத்தினார். 

ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., உரை (பக்கம் : 2)