புதுதில்லி, ஜூலை 24 - மாநிலங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளு மன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2024-25 நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டை, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் செவ்வாயன்று தாக்கல் செய்தார். இதில், பாஜக-வின் இரண்டு முக்கிய கூட்டாளிகள் ஆளும் மாநிலங்களான பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ஆதரவாக ஏராள மான திட்டங்களையும், நிதி ஒதுக்கீட்டையும் அறிவித்த நிர்மலா சீதா ராமன், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மற்றும் தங்களுக்கு வாக்களிக்காத மாநி லங்களை முற்றிலுமாக புறக்கணித்தார்.
முன்னெப்போதும் இல்லாத வகையில், ஆளும் கூட்டணி தலைமை யிலான மாநிலங்கள், எதிர்க்கட்சி கூட் டணி ஆளும் மாநிலங்கள் என்று பிரித்தா ளும் பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார். இதற்கு ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், பட்ஜெட் தாக்க லின் போதே கண்டனம் தெரிவித்திருந்த னர்.
இந்நிலையில், புதனன்று நாடாளு மன்ற வளாகத்தில் கூடி, மோடி அரசின் பாரபட்சமான பட்ஜெட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், நாடாளு மன்ற காங்கிரஸ் குழு தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநி லங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சிபிஎம் மக்களவைக் குழுத் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.பி.க்கள் அம்ரா ராம், சு.வெங்கடேசன், ஆர்.சச்சிதானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிதி ஒதுக்கீட்டில் மாநிலங்களைப் பாரபட்சமாக நடத்தும் ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இந்த பட்ஜெட் பாஜகவின் கூட்டாளிகளை திருப்திப்படுத்துவதற்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் (பாஜக) யாருக்கும் எதுவும் கொடுக்க வில்லை. இது பாரபட்சமான பட்ஜெட். இந்த பட்ஜெட்டை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம்” எனக் குறிப்பிட்டார். “விவ சாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க வேண்டும் என்று நாங்கள் அனைவரும் கோரியிருந்தோம். ஆனால் விவசாயிகளை விட தங்கள் அரசாங்கத் தை காப்பாற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவு விலை கொடுக்கப்பட்டுள்ளது” என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் தெரிவித்தார்.
“உத்தரப்பிரதேசத்தில் இரட்டை என்ஜின் அரசு இருப்பதால், இந்த பட்ஜெட்டில் இரட்டைப்பலன் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், (சரி பாதிக்கும் மேல் தோற்கடித்த) லக்னோ மக்கள் மீதும் ஆட்சியாளர்கள் கோபத்தில் இருக்கிறார்கள் என்று நான் நினைக் கிறேன்” என்றும் குறிப்பிட்டார்.
பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து புதனன்று நாடாளுமன்றம் கூடிய நிலை யில், ஒன்றிய பாஜக அரசின் பாரபட்ச மான பட்ஜெட்டைக் கண்டித்து மக்களவை மற்றும் மாநிலங்களவையிலும் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் எதிர்ப்பைக் காட்டும் விதிமாக வெளிநடப்பும் செய்தனர்.
சந்திரபாபு நாயுடு நன்றி
இதனிடையே ரூ. 15 ஆயிரம் கோடி நிதி அறிவிப்புக்காக ஆந்திர முதல்வரும், பாஜகவின் முக்கிய கூட்டாளி யுமான சந்திரபாபு நாயுடு (தெலுங்கு தேசம் கட்சி) நன்றி தெரிவித்துள்ளார். “ஐசியூவில் இருந்த ஆந்திராவின் நிதி நிலைமைக்கு இந்த பட்ஜெட் ஆக்ஸிஜன் அளித்தது போல் உள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதிஷ் குமார் அதிருப்தி
இதனிடையே, ரூ. 37 ஆயிரத்து 500 கோடி நிதி ஒதுக்கீடு அறிவித்தும் பீகார் முதல்வரும் பாஜகவின் மற்றொரு முக்கிய கூட்டாளியுமான நிதிஷ் குமார் (ஐக்கிய ஜனதா தளம்) அதிருப்தி மன நிலையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கேட்ட சிறப்பு அந்தஸ்து வழங்கப் படவில்லை என்பதே அதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து செய்தி யாளர்கள் கேட்டதற்கு, “கொஞ்சம், கொஞ்சமாக உங்களுக்கு எல்லாம் தெரியவரும்” என சிரித்துக் கொண்டே நிதிஷ் குமார் பதிலளித்துள்ளார்.
ஒவ்வொரு மாநிலத்தையும் சொல்லிக்கொண்டிருக்க முடியாதாம்
நிர்மலா சீதாராமன் மீண்டும் ஆணவமான பதில்
ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் பல மாநிலங்களின் பெயர்கள் கூட குறிப்பிடப்படவில்லை; மாநிலங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது என்று இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்திய நிலையில், இதற்கு மாநிலங்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் பதிலளித்தார்.
அப்போது, “பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை எனக் கூறி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். நான் மகாராஷ்டிராவைக் குறிப்பிடவில்லை. ஆனால், அந்த மாநிலத்தின் ரூ. 76 ஆயிரம் கோடி மதிப்பிலான துறைமுக திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளோம். பெயர் குறிப்பிடாததால் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூற முடியாது. செலவுக் கணக்கில் திட்டங்கள் வாரியாக நிதி ஒதுக்கீடு குறித்து தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை என்றும், அந்த மாநிலங்களுக்கு எதுவும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் கூறுவது அரசாங்கத்தை இழிவுபடுத்தும் காங்கிரஸின் திட்டமிட்ட முயற்சி. இது ஒரு மூர்க்கத்தனமான குற்றச்சாட்டு. காங்கிரஸ் ஆட்சிக் கால நிதி அமைச்சர்கள் தங்கள் பட்ஜெட் உரையின் போது அனைத்து மாநிலங்களின் பெயர்களையும் குறிப்பிட்டார்களா?” என எதிர்க்கேள்வி எழுப்பி ஆணவமான முறையில் பதிலளித்தார்.