india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கட்டுப்பாடுகளால் தில்லியில் காற்றின் தரத்தில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. புதன் கிழமை காலை தில்லியின் பெரும்பாலான இடங்க ளில் காற்றின் தரக்குறியீடு 300 புள்ளிகளாக குறைந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கனோஜ் பகுதியின் ஆக்ரா - லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 மருத்துவர்கள் உயிரிழந்தனர். 

மணிப்பூர் மாநிலம் காங்போக்பியில் ராணுவ தளத்தில் ஒப்பந்ததாரராக பணிபுரியும் மெய் டெய் பிரிவைச் சேர்ந்த லைஷ்ராம் கமல்பாபு சிங் (56) என்ப வர் காணாமல் போயுள்ளார். இதனால் காங்போ க்பி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மீண்டும் வன்முறை பதற்றம் உருவாகியுள்ளது. 

சபரிமலையில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்துள்ளது. புதன் கிழமை காலை வெறும் 4 மணி நேர இடைவெளி யில் 26 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கிறிஸ்தவராக மதம் மாறிய பின்னர் வேலைக்காக இந்து என்று தெரிவித்து எஸ்.சி., (ஆதிதிராவிடர்) சான்றிதழ் கோரிய பெண்ணுக்கு சான்றிதழ் வழங்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதி மன்றம் உறுதி செய்தது.

மணிப்பூரில் சமீபத்தில் நடந்த வன்முறை சம்ப வம் தொடர்பான மூன்று முக்கிய வழக்குகளை விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. 

“திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றினார்” என தெலுங்கு நடிகர் ஸ்ரீதேஜ் மீது ஹைதரா பாத்தை அடுத்த குகட்பள்ளி காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

ஹைதராபாத்

ஐயப்ப பக்தர்கள் மூலம் கேரளாவில் மத வன்முறையை கிளப்ப பாஜக திட்டம்

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரி மலை ஐயப்பன் கோவில் செல்லும் வழியில் எரிமேலியில் உள்ளது  வாவர் மசூதி. மலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் இந்த வாவர் மசூதியில்  வழிபடுவது வழக்கம். அதாவது தொ ழுகை மண்டபத்திற்குள் நுழையாமல் மசூதியைச் சுற்றி வருவார்கள். மசூதி நிர்வாகம் அளிக்கும் கனிக்காவையும் (பிரசாதம்) ஐயப்ப பக்தர்கள் உண்டு, மரபுகளின் ஒரு பகுதியாக மசூதி வளா கத்தில் தேங்காய் உடைக்கின்றனர். சபரி மலையில் இருந்து 60 கிமீ தொலை வில் உள்ள இந்த வாவர் மசூதிக்கு, கேரளாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்தும் வரும் ஐயப்ப பக்தர்கள் வாவர் மசூதியில் வழிபாடு நடத்துகின்றனர். வாவர் மசூதி நாட்டின் புகழ்பெற்ற மசூதிகளில் ஒன்றாகும். மேலும் இந்து - முஸ்லிம் மக்களின் மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் மைய மாக உள்ளது. அதனால் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் வாவர்மசூதிக்கு செல்லாமல், மலை ஏற மாட்டார்கள். இது நூற்றாண்டுகால வழக்கம் ஆகும்.

இந்நிலையில், சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மூலம் கேரளாவில் இந்து - முஸ்லிம் வன்முறையை கிளப்ப பாஜக திட்டம் தீட்டி வருகிறது. சர்ச்சை மற்றும் வெறுப்புப் பேச்சிற்கு பெயர் பெற்ற தெலுங்கானா பாஜக எம்எல்ஏவான (கோஷாமஹால் சட்டமன்றத் தொகுதி) டி.ராஜா சிங்,”சபரிமலை செல்லும் இந்து ஐயப்ப பக்தர்கள் எருமேலியில் உள்ள வாவர் மசூதிக்குள் செல்ல வே ண்டாம். அங்கு சென்றால் நக்சலைட்டு களின் சதிகளில் சிக்கி, இந்துக்களான ஐயப்ப பக்தர்கள் ஆபத்தை எதிர்கொள் வீர்கள்” என மத வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ளார். டி.ராஜா சிங்கின் இந்த பேச்சிற்கு சமூகவலைத் தளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.