india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

உச்சநீதிமன்றத்தில் இதுவரை இல்லாத அள வில் 83,000 வழக்குகள் நிலுவையில் உள்ள தாக பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார். இது 10 ஆண்டுகளில் மிக அதிகம் எனவும், இதே கால கட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 8 மடங்கு அதிகரித்து உள்ளது என கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது. 

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் வெள்ளியன்று பாஜகவில் இணைந்தார்.

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் “ஊழல்  மிகுந்த பாஜக ஆட்சியை” கண்டித்து காங்கி ரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

திரையுலகில் பாலியல் சுரண்டல் தொடர்பாக நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் முழு வடிவத்தை அளிக்கும்படி கேரள அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் ஹேமா கமிட்டி அறிக்கையை கேரள அரசு வழங்க வேண்டும் என ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2012இல் தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கில் காங்கிரஸ் வேட்பாளர் விகார் ரசூல் வாணிக்கு நீதிமன்றம் தற்போது 5 மாத சிறை தண்டனை விதித்துள்ளது. 

கவுகாத்தி
சட்டமன்றத்தில் வெள்ளிக்கிழமை தொழுகை இடைவேளை ரத்து: அசாம் பாஜக அரசு

பாஜக ஆளும் அசாம் மாநில  சட்டமன்றத்தில் வெள்ளி யன்று தொழுகை (நமாஸ்) செய்ய மதியம் 12:00 மணி முதல் மதி யம் 2 மணி வரை 2 மணிநேர இடை வேளை வழங்கப்படுகிறது. இந்த 2  மணிநேர இடைவேளைக்காக கூட்டத்  தொடர் காலத்தில் அசாம் சட்டமன்றத் தில் வெள்ளியன்று மட்டும் 9:00 மணிக்கு  சட்டமன்றம் கூடும். மற்ற நாட்களில் 9:30  மணிக்கு கூடும் என்ற நிலையில், சட்ட மன்றத்தில் வெள்ளியன்று தொழுகை செய்யும் இடைவேளையை ரத்து செய்  வதாக அசாம் அரசு தீர்மானம் கொண்டு  வந்தது. விவாதமின்றி இந்த தீர்மானத்தை  சட்டமன்றத்தின் புதிய விதியாக மாற் றப்படும் என சபாநாயகர் பிஸ்வஜித் டைமரி அறிவித்தார்.