வேலையின்மையின் விகிதம் இந்தியாவில் 3.2 சதவிகிதம் சரிந்து விட்டதாக ஒன்றிய பட்ஜெட் ஆவணங்க ளில் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டி ருக்கிறார். பொய் என்பதெல்லாம் தாண்டி ஒரு குரூர நகைச்சுவை என்றே இதை சொல்ல வேண்டும்.சமீப காலம் வரை இந்தியா 43 ஆண்டுகளில் காணாத அளவிற்கு வேலையின்மை உச்சம் அடைந்திருக்கிறது என்று பல்வேறு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசு துறைகளில் காலியாக உள்ள 10 லட்சம் பணியிடங்கள் இன்று வரையிலும் நிரப்பப்படவில்லை.
அப்படி நிரப்பியிருப்பதாக ஒன்றிய அரசும் எங்கும் தெரிவிக்கவில்லை. ரயில்வேயில் மட்டும் 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பணி யிடங்கள் காலியாக உள்ளதாக பலாசுர் ரயில் விபத்திற்கு பின்பு வெளிப்பட்டது. அப்போது பாதுகாப்பு பணிகளில் மட்டும் 1.20 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருக்கிறது என்றும் சொல்லப்பட்டது. புதிய தொழில் நிறுவனங்கள் எதுவும் துவக்கப்படவில்லை. நாடு முழுவதும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வேலையிழப்புகளையும் ஏற்படுத்தி இருக்கின்றன.
புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு ஒன்றிய அரசு எந்தவொரு நடவடிக்கையையும் உருப்படியாக எடுக்கவில்லை. பல்வேறு மாநிலங்களிலும் பொதுத்துறை நிறுவ னங்களில் இதுதான் நிலைமை. தவிர, தகவல் தொழில் நுட்பத் துறையில் புதிய வேலைக்கான ஆள் எடுப்புகள் இந்த ஆண்டில்தான் மிகக் குறைவு என்று சொல்லப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் இடையில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 3.2 சதவிகிதம் அளவிற்கு குறைந்திருக்கிறது என்று சொன்னால் அது மந்திரத்தில் தான் நடந்திருக்க வேண்டும்.
உலகம் முழுவதும் பொதுவாகவே வேலையின்மை அல்லது வேலையில் இருப்போர் பற்றிய விபரங்களை கணக்கில் எடுப்பதற்கு 15 வயது முதல் 64 வயது வரை உள்ள நபர்களிடையே இந்த விகிதத்தை கணக்கிடுகிறார்கள். வேலை வாய்ப்பு விகிதம் 2011-12 ஆம் ஆண்டு 52 சதவிகிதமாக இருந்தது. ஆனால், தற்போது இந்த விகிதம் என்ன வாக இருக்கிறது என்று சிஎம்ஐஇ (இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம்) கீழ்க்கண்ட பட்டியலை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது.
கடந்த சில நாட்க ளுக்கு முன்பு இந்த நிறுவனம் வெளி யிட்டுள்ள ஆய்வில் இந்தியாவின் வேலை வாய்ப்பு விகிதத்தை கீழ்க்கண்டவாறு மதிப்பிட்டிருந்தது. இந்தியாவில் பொதுவாக 15 வய துக்கும் 64 வயதுக்கும் பிற்பட்டோரின் விகிதம் 64.9 என்று மதிப்பீடு செய்யப் பட்டிருக்கிறது. இந்தியாவில் தற்போதுள்ள 144.53 கோடி பேர்களில் 93.08 கோடி பேர் வேலை செய்ய தகுதியான மக்கள் தொகையாகும். 2016-17 முதல் 2021-22 வரையிலான காலத்தில் மட்டும் 5.77 சதவிகிதம் வேலை வாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளன.
எண்ணிக்கையில் சொல்ல வேண்டுமானால் 5.37 கோடிப் பேரின் வேலைகள் மறைந்து போய் இருக்கின்றன. இந்த நிலையில் வேலை வாய்ப்பு விகிதம் மிகக் குறைவாக இருப்ப தாக பட்ஜெட் ஆவணங்களில் சொல்லி யிருப்பது ஒரு வடிகட்டிய பொய்யாகும்.
கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் 11 கோடிப் பேருக்கு வேலை, அவர்கள் கேட்டு மறுக் கப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லாதது, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும், ஸ்மார்ட் போனில் கைரேகை வைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைக ளின் காரணமாக இந்த 11 கோடிப் பேர் வேலையிழந்திருக்கிறார்கள்.
மோடி 2014 தேர்தலுக்கு முன்பாக ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை தருவதாகச் சொன்னார். ஆனால், ஒரே ஆண்டில் 11 கோடிப் பேருக்கு வேலையையும் பறித்து விட்டு புதிய வேலைவாய்ப்புகள் எதையும் அளிக்காமல் வேலையின்மை விகிதம் 3.2 சதவிகிதமாக குறைந்துவிட்டது என்று சொல்வது அப்பட்டமான அண்டப் புளுகு.