நாடுமுழுவதும் மொத்தம் 1,01,88,007 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடத் தொடங்கிய பிறகு முதன்முறையாக 1 கோடியை எட்டியுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13,193 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,09,63,394 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1,06,67,741 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து கடந்த 24 மணிநேரத்தில் 10,896 குணமடைந்துள்ளனர்.
கொரோனாவால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,39,542 ஆகக் குறைந்துள்ளது.கொரோனா வைரஸால் நேற்று மட்டும் 97 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,56,111 ஆக உயர்ந்துள்ளது. நாடுமுழுவதும் மொத்தம் 1,01,88,007 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.