மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக அமலாக்கத்துறை, சிபிஐ, வரு மானவரித்துறை ஆகிய மத்திய அமைப்புகள் மூலம் “இந்தியா” கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு எதிராக சம்மன், சோதனை மற்றும் கைது நடவ டிக்கைகளை அரங்கேற்றி மக்களவைத் தேர் தல் பிரச்சாரத்திற்கு வரவிடாமல் தடுக்க ஒன்றிய மோடி அரசு தீவிரமாக களமி றங்கியுள்ளது. தற்போது “இந்தியா” கூட் டணி ஆளும் மாநிலங்களான மேற்கு வங்கம், தில்லி, ஜார்க்கண்ட், தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தொடர் சோதனையை அரங்கேற்றியும், தில்லி, ஜார்க்கண்ட் முதல்வர்களுக்கு அமலாக் கத்துறை சம்மன் அனுப்பியுமுள்ளது. இந்நிலையில், அடுத்ததாக “இந்தியா” கூட்டணி கட்சியில் அங்கம் வகிக்கும் ஜம்மு- காஷ்மீரின் பிரதான கட்சியான தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான பரூக் அப் துல்லா பணமோசடி வழக்கின் கீழ் அம லாக்கத்துறை விசாரணைக்கு அழைக் கப்பட்டுள்ளார். ஜம்மு - காஷ்மீர் கிரிக் கெட் சங்கத்தில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத் துறையின் விசாரணைக்கு ஆஜராகுமாறு பரூக் அப்துல்லாவுக்கு சம்மன் அனுப்பப் பட்டுள்ளது. 86 வயதாகும் பரூக் அப் துல்லா ஸ்ரீநகரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.