india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நீராடுவதற்கு தகுதியற்றதாக கங்கை நீர் உள்  ளது என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மும்பை விமான நிலையத்தில் சக்கர நாற் காலி வழங்க கால தாமதம் ஏற்பட்டதால் 80 வயது பயணி உயிரிழந்த விவகாரத்தில், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள வியாஸ் மண்டபத்தில் மண்டபத்தின் கூரைப்பகுதியை முஸ்லிம்கள் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, வாரணாசி நீதிமன்றத்தில் இந்து தரப்பு மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது.

இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது என்ற ராஜஸ்தான் மாநில அரசின் சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் திண்டோரியில் புதனன்று இரவு சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திராவில் விருப்ப ஓய்வு பெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ஏ.எம்.இம்தியாஸ் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா பல்கலைக் கழகத்தில்  பிபிஏ முதலாம் ஆண்டு மாணவர் யஷ் மிட்டல் என்ப வரை அவர்களது நண்பர்களே அடித்துக் கொன்ற  கொடூரம் நடந்துள்ளது.

கர்நாடக அரசு சார்பில் நடத்தி முடிக்கப் பட்டுள்ள சாதிவாரி மக்கள் தொகை கணக்கெ டுப்பு அறிக்கையை 9 ஆண்டுகளுக்கு பின் வியா ழனன்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமை யாவிடம் மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் ஜெயபிரகாஷ் ஹெக்டே ஒப்படைத்தார்.

1993 டிசம்பர் 6 அன்று லக்னோ, கான்பூர், ஹைதராபாத், சூரத் மற்றும் மும்பை  நகரங்களில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்  புச் சம்பவங்கள் நடந்தன. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி அப்துல் கரீம் துண்டாவை (80) வியாழனன்று ஆஜ்மீர் தடா (TADA) நீதிமன்றம் விடுவித்தது. இருப்பினும் அவருடன் குற்றம்சாட்டப்பட்ட இர்பான் (70), ஹமீதுதீன் (44) ஆகியோர் ஆயுள்  தண்டனைக்கு உட்படுத்தப்படுவதாக தடா நீதிமன்ற  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சிம்லா
இமாச்சலில் தகர்ந்தது “ஆபரேஷன் தாமரை”
பாஜகவிற்கு தாவிய
6 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்

காங்கிரஸ் ஆளும் இமாச்சலப்  பிரதேசத்தில் செவ்வா யன்று நடைபெற்ற மாநி லங்களவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி யின் 6 எம்எல்ஏக்கள் மற்றும் 3 சுயேச்சை  எம்எல்ஏக்களை கடத்தி, 9 பேரையும் தங்  கள் பக்கம் இழுத்து ஒரே ஒரு மாநிலங்க ளவை இடத்தை கைப்பற்றியது பாஜக.  மேலும் 9 எம்எல்ஏக்களையும் ஹரியானா வில் அடைத்து வைத்து, தனது ஆதரவு  எம்எல்ஏக்களாக புதனன்று சட்டமன்றத் தில் களமிறக்கியது பாஜக. 

அடுத்த சில நிமிடங்களில் சிம்லா புற நகர் தொகுதி எம்எல்ஏவும், மாநிலத்தின் பொதுப்பணித்துறை அமைச்சருமான விக்ரமாதித்ய சிங் தனது பதவியை ராஜி னாமா செய்வதாக அறிவிக்க, இமாச்ச லப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவி ழும் சூழல் உருவானது. ஆட்சியை காப்  பாற்ற காங்கிரஸ் மேலிடம் டி.கே.சிவக் குமார், பூபேஷ் பாகேல், பூபிந்தர் சிங் ஹூடா உள்ளிட்ட மூத்த தலைவர்களை இமாச்சலப்பிரதேசத்திற்கு அனுப்பி வைத்தது. இதில் டி.கே.சிவக்குமார் பாஜகவின் சதி வேலைகளை முறி யடிக்க தீவிரமாக களமிறங்கினார். ராஜி னாமா செய்த விக்ரமாதித்ய சிங்கை மீண்டும் அமைச்சராக பணியாற்ற வைத்தார். மேலும் புதனன்று நள்ளிரவு வரை காங்கிரஸ் கட்சியில் தற்போது இருக்கும் அனைத்து எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாஜகவிற்கு செல்ல மாட்டோம் என உறுதி வாங்கி னார்.

இதனை தொடர்ந்து வியாழனன்று கட்சி தாவி மாநிலங்களவைத் தேர்த லில் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்த  காங்கிரஸைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்களை  தகுதிநீக்கம் செய்து. இனி அந்த 6 பேரும்  சட்டமன்ற உறுப்பினராகத் தொடர முடி யாது என சபாநாயகர் குல்தீப் சிங் பதா னியா அறிவித்தார். இதனால் பாஜகவின்  இழிவான அரசியல் முறையான “ஆப ரேசன் தாமரை” முறையை காங்கிரஸ் தகர்த்துள்ளது. இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக துணை முதல்வருமான டி.கே.சிவக்குமாருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.