வரும் 2024-25-ம் கல்வியாண்டு முதல் சிபி எஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் மாண வர்களுக்கு ஆண்டுக்கு 2 பொதுத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் அவதூறு வழக்கில் எழுத்துப்பூர்வ பதில் மனுவை தாக்கல் செய்ய தாமதம் ஏற்படுத்தி யதற்காக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு, தானே நீதித்துறை நடுவர் மன்றம் ரூ.500 அபராதம் விதித்துள்ளது.
ராமர் சிலை புகைப்படம் வெளியானதற்கு ராமர் கோவில் தலைமை பூசாரி கடும் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இதுதொடர் பாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூர் யார்டில் இருந்து சனியன்று அதிகாலை நடைமேடைக்கு கொண்டு வரப்பட்ட போது கண்ணூர் - ஆலப்புழ எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் திடீரென தடம்புரண்டன. யார்ட்டில் இருந்து வந்ததால் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை.
மத்தியப்பிரதேச மாநிலம் ஜஹாங்கிராபாத் காவல்நிலையப் பகுதியில் உள்ள மாநில அரசுக்கு சொந்தமான நீர் விளையாட்டு ஆணை யத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 5 படகுகள் தீயில் கருகியது. ஒரு படகின் விலை ரூ.20 லட்சம் என்ற நிலையில், இந்த படகு விபத்தால் ரூ.1 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலை யில் பாஜக ஆள்பிடி வேலையை தொடங்கி யுள்ளது. சமீபத்தில் ஆம் ஆத்மியில் இருந்து வில கிய அசோக் தன்வார் சனியன்று பாஜகவில் இணைந்தார்.
தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங்குக்கு நீதிமன்றக் காவலை பிப்.3 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு.
உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியாபுர்வா கிராமத்தில் வசித்து வரும் ஆயிஷா(8) என்ற சிறுமி சிறுத்தை தாக்கி உயிரிழந்தார்.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா வை முன்னிட்டு வரும் 22-ஆம் தேதி தில்லி யில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தில்லி
ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு ஆம் ஆத்மியும் எதிர்ப்பு
நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டமன்றங்கள் மற்றும் உள் ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை யில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள் ளது. இதுதொடர்பாக பொதுமக்கள் தங் கள் கருத்துகளை 10 நாட்களுக்குள் தெரி விக்கலாம் என ஜனவரி 5-ஆம் தேதி ராம் நாத் கோவிந்த் தலைமையிலான குழு அறி வித்திருந்தது.
பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற் காக காலக்கெடு ஜனவரி 15-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், இந்த ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, காங்கிரஸ், திமுக, திரிணா முல் காங்கிரஸ் உள்ளிட்ட “இந்தியா” கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளன.
இந்நிலையில், “இந்தியா” கூட்டணி யில் அங்கம் வகிக்கும் மற்றொரு கட்சி யான ஆம் ஆத்மியும் ஒரே நாடு, ஒரே தேர்த லுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சனியன்று ஆம் ஆத்மி வெளி யிட்ட அறிக்கையில்,”ஒரே நாடு, ஒரே தேர் தல் நாடாளுமன்றத்தின் அரசியல் கட்ட மைப்பை சேதப்படுத்தும். சாதாரண தொங்கு சட்டமன்றத்தை கூட சமாளிக்க முடியாது. எம்பி., எம்எல்ஏக்களை வெளிப் படையாக விலைக்கு வாங்கும் நிலை யை தீவிரமாக ஊக்குவிக்கும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம் ஒன்றிய அரசின் பட்ஜெட் மிச்சப்படுத் தும் செலவு 0.1 சதவீதம் மட்டுமே. குறுகிய நிதி ஆதாயங்கள், நிர்வாக வசதிக்காக அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை தியாகம் செய்ய முடியாது” என அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.
இம்பால்
மணிப்பூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பாஜக ஆளும் வடகிழக்கு மாநி லங்களில் ஒன்றான மணிப்பூ ரில் மீண்டும் வன்முறை சம்ப வங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜனவரி 17 அன்று இம்பால் கிழக்கு பகுதி யில் 23 வயது தன்னார்வலர் துப்பாக்கி யால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தால் மணிப்பூர் முழு வதும் வன்முறை பதற்றம் மேலும் அதி கரித்துள்ளது. தன்னார்வலர் கொலை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி உள்ளூர் குடிமக்கள் அமைப்பு கள் இணைந்த கூட்டுக் குழு அறிவித்த 48 மணிநேரம் வேலை நிறுத்தப் போராட் டம் சனியன்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது. இந்த முழு அடைப்பு போராட்டத்தால் மணிப்பூரின் 80 சதவீதப் பகுதிகளில் சந்தை மற்றும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டும், பொது வாகன சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளது. முழுஅடைப்பு போராட் டம் பற்றி அம்மாநில பாஜக முதல்வர் பைரன் சிங் சாதாரண செய்தி அறிவிப்பு கூட வெளியிடவில்லை என்பது குறிப்பி டத்தக்கது.
புவனேஸ்வர்
2 பள்ளி மாணவிகள் பலாத்காரம்
ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டம் ராஜ்நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இருவர் பள்ளியில் இருந்து வந்த பின், மீண்டும் பள்ளிக்கு செல்ல மாட்டோம் என அவர வர் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மாணவி களிடம் தொடர் விசாரணையில் ஈடுபட பள்ளியில் தலைமை ஆசிரியர் (45 வயது மிக்கவர்) இருவரையும் ஒரு அறையில் அடைத்து அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறினர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி களின் பெற்றோர் ராஜ்நகர் போலீசில் புகார் அளித்த நிலையில், போலீசார் விசா ரணை நடத்தி குற்றம் சாட்டப்பட்ட தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.