ஹோமியோபதி உட்பட நாட்டின் பாரம்பரிய வைத்திய முறைகளை வளர்த்தெடுக்க ஆயுஷ் அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன் கேட்டிருந்த கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பி.ஆர். நடராஜன், ஹோமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளை வளர்த்தெடுக்க அரசு மேற்கொண்டுவரும் திட்டங்கள் என்னென்ன என்றும், அவற்றை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன என்றும் கேட்டிருந்தார்.
இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த ஒன்றிய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீ சர்பானந்தா சோனோவால், கூறியதாவது:
ஹோமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைக்கு சம்பந்தமுள்ள பதிவு செய்யப்பட்ட அறிவியல் அமைப்புகள் மற்றும் சமய தொண்டு நன்கொடைகள் பற்றிய விபரங்கள் எதுவும் ஆயுஷ் அமைச்சகத்தால் பராமரிக்கப்படவில்லை. எனினும், அரசு சாராத் தன்னார்வக்குழுக்கள் பல செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.
ஆயுஷ் மருத்துவ முறையின், செயல் திறன், செலவுத்திறன் மற்றும் பொதுவான நோய்கள் தடுப்பு மற்றும் சிகிச்சைக்குப் பயன்படும், மூலிகைகள் அவரவர் வீட்டு வாசலில் கிடைக்கும் வாய்ப்பு ஆகியவை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்க ஆயுஷ் அமைச்சகம், காணொளிக் காட்சிகள் உள்ளிட்ட, கல்வி சாதனங்கள் உருவாக்குதல் போன்ற பல்வேறு வழிகளில், தகவல்கள், கல்வி மற்றும் தகவல் தொடர்பு திட்டங்களை செயல்படுத்துகிறது.
ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ், ஆயுஷ் அமைச்சகம் மற்றும் ஆராய்ச்சி கவுன்சில்கள், தேசிய அமைப்புகள் ஆகியவற்றினுடைய இணையதளமானது, ஆயுஷ் முறைகளின் மூலம், நோய்த்தடுப்பு பற்றிய அறிவுரைகள் அடங்கிய ஆயுஷ் முறையின் விவரங்களை வெளியிடுகிறது. சமூக ஊடகங்களின் மூலமும் ஆயுஷ் முறைகள் வளர்த்தெடுக்கப்படுகின்றன.
இவ்வாறு அமைச்சர் பதிலளித்துள்ளார்.