india

img

தோற்கடிக்கப்பட்ட கட்சி ஆட்சியில் உள்ளது: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் சாடல்

நாடாளுமன்ற மக்களவை யின் 6ஆவது நாளான  திங்களன்று எதிர்க்கட்  சித் தலைவர் ராகுல் காந்தி, திமுக வின் ஆ.ராசா, திரிணாமுல் காங் கிரஸின் மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட “இந்தியா” கூட்டணி எம்.பி.க்களின் அதிரடி பேச்சால்  பிரதமர் மோடி, உள்துறை அமைச்  சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்  ளிட்ட பாஜக எம்.பி.க்கள் பதில ளிக்க முடியாமல் திக்குமுக்காடி னர். கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் முதன்முறையாக எதிர்க்கட்சி எம்.பி.க்களின் பேச்  சிற்கு பிரதமர் மோடி, அமித் ஷா,  ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் எழுந்து  நின்று விளக்கம் அளிக்கும் நிலைக்கு  தள்ளப்பட்டனர். 

6ஆவது நாளைப் போன்று  7ஆவது நாளான செவ்வாயன் றும் “இந்தியா” கூட்டணி எம்.பி.க்  களின் அதிரடி பேச்சால் நாடாளு மன்றம் அதிர்ந்தது. 

“இந்தியா” கூட்டணியில் அங்  கம் வகிக்கும் சமாஜ்வாதி கட்சித்  தலைவரும், கன்னோஜ் தொகுதி எம்.பி.யுமான அகிலேஷ் மக்கள வையில், “ தோற்கடிக்கப்பட்ட கட்சி ஆட்சியில் உள்ளது. அத னால் மோடி அரசு நீடிக்க வாய்ப்  பில்லை” என கூறி பாஜகவை பந்தாடினார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில்,”என்னை தேர்வு  செய்த மக்களுக்கு முதலில் நன்றி யை தெரிவித்துக்கொள்கிறேன். தேர் தல் முடிவு வெளியான ஜூன் 4 வகுப்புவாத அரசியலிலிருந்து நாடு சுதந்திரம் அடைந்ததைக் குறிக்கிறது. 400 இடங்களை கைப்  பற்றுவோம் என்று பாஜகவினர் அடிக்கடி கூறினார்கள். ஆனால்  240 தொகுதிகளில் சுருங்கி, முதல் முறையாக தோற்கடிக்கப்பட்ட  கட்சி ஆட்சியில் இருப்பது போலத் தோன்றுகிறது. இந்த அரசு நீடிக்காது என்று மக்களே  கருதுகிறார்கள். மக்களை பிரிக்  கும் அரசியல் தோற்கடிக்கப்பட்டு,  மக்களை ஒருங்கிணைக்கும் அர சியல் வென்றிருக்கிறது. அதாவது  எதிர்க்கட்சி அணி தார்மீக வெற்றி  பெற்றுள்ளது. ஏனென்றால் “இந் தியா” கூட்டணி இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கிறது என்பது முழு இந்தியாவுக்கும் தெரியும்” எனக் கூறினார்.

இவிஎம் மீது நம்பிக்கை இல்லை

மேலும், ”உத்தரப்பிரதேசத் தில் எனது கட்சி அதிக இடங்க ளில் வென்றிருந்தாலும், இனி  நடக்கும் அனைத்து நாடாளு மன்றத் தேர்தலிலும் எனது கட்சி  வெற்றி பெற்றாலும், இவிஎம் வாக்குப்பதிவு முறை குறித்து  தொடர்ந்து கேள்வி எழுப்புவேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால்  (இவிஎம்) வாக்குப்பதிவை நிறுத்து வோம். இந்தியா இப்போது உலகின் ஐந்தாவது பெரிய பொரு ளாதாரமாக இருப்பதாக ஆளும்  அரசு பிம்பத்தை கட்டமைக்கிறது.  ஆனால், தனிநபர் வருமானத்தில்  நாம் எப்படி இருக்கிறோம், பசிக் குறியீடு, மக்களின் மகிழ்ச்சிக் குறி யீடு போன்ற ஆய்வுகளில் நம் நிலை என்ன என்பது குறித்து ஏன்  மறைக்கிறது? ஒருவரின் தனிப் பட்ட லட்சியங்களுக்காக நாடு  இயங்காது. மக்கள் எதை விரும்பு கிறார்களோ அதைக்கொண்டு தான் இயங்கும்” என்று கூறினார்.

நீட் மாபியா குழுவை உருவாக்கிய பாஜக

“கடந்த 10 வருட பாஜக அர சின் சாதனை என்பது ஒரு போட்  டித் தேர்வு மாபியா குழுவை உரு வாக்கியதுதான். ஒரு இளைஞன் தேர்வுக்கு கடுமையாகத் தயா ராகி, தேர்வுக்காக காத்திருந்தால்,  தேர்வுக்கு முதல்நாள் வினாத் தாள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு அனைத்து தேர்வுகளின் தாட் களும் கசிந்திருக்கின்றன. இளை ஞர்களின் நம்பிக்கையில் விஷம் கலந்துவிட்டது. மக்களின் நம்பிக்  கையைக் கொல்லும் அரசால் நிகழ்காலத்தை மாற்றவோ அல்லது எதிர்காலத்தை சிறப்பாக மாற்றவோ முடியாது.  இரட்டை இன்ஜின் அரசின் தோல்விக்கு மிக முக்கிய உதார ணம் உத்தரப்பிரதேசம். நீங்கள் ஏற்படுத்திய சாலையில் இப் போது படகுகள் ஓடுகின்றன. இது  தான் ஸ்மார்ட் சிட்டியின் லட்ச ணம். அயோத்தி கோவில் அமைந்  திருக்கும் பைசாபாத் தொகுதி யில் கூட எங்கள் கட்சிதான் வென்றது. சமூக நீதியை நிறை வேற்ற சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியம்” எனக் கூறினார்.

 

;