india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 430 ஆக உயர்ந்துள்ளது. காணா மல் போன 120க்கும் மேற்பட்டோரை தேடும் பணி 13வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

தில்லியின் ரன்ஹோலா பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் மின்சாரம் தாக்கி யதில் 13 வயது சிறுவன் உயிரிழந்தார்.

கர்நாடகா மாநிலம் விஜயநகரா மாவட்டம் ஹோசபேட் அருகே அமைந்துள்ள துங்கபத்ரா அணையின் 19ஆவது கதவு உடைந் தது. இதனால்  அணையிலிருந்து அதிகளவு தண்ணீர் வெளியேறி வரும் நிலையில், துங்க பத்ரா ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கேரளாவில் பாலக்காடு, மலப்புரம் ஆகிய  2 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், வயநாடு, திருவனந்த புரம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, கோழிக்கோடு ஆகிய 6 மாவட்டங்களில் கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப் பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரம் நிலுவையில் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிக மகசூல், பருவநிலையைத் தாக்குப்பிடிக்கும் மற்றும் உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் ரகங்களை பிரதமர் மோடி ஞாயிறன்று வெளியிட்டார்.

புதிதாக தொழில் தொடங்குவோருக்கு மாதம் ரூ.25 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை கர்நாடக அரசு அறிமுகப்படுத்த உள்ள தாக அம்மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே தெரி வித்துள்ளார்.

“நீரஜ் சோப்ராவின் தாய் எனக்கும் தாய் தான்” என பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கம்  வென்ற பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் செய்தியாளர்கள் சந்திப்பில் நெகிழ்ச்சியுடன் கூறினார். முன்னதாக நீரஜ் சோப்ராவின் தாயார் சரோஜ் தேவி,”அர்ஷத் நதீம் எனக்கும் மகன் தான்”  என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

“அதானி குழுமத்தை விசாரிக்க வேண்டிய செபி தலைவருக்கே அந்த நிறுவனத்தில் பங்கு உள்ளது. வேலிக்கு ஓணான் சாட்சியா?” என பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனி வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங்கின் மறைவுக்கு குடியரசு தலை வர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட  தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்
குண்டு வெடிப்பில் முன்னாள் எம்எல்ஏ மனைவி பலி

வடகிழக்கு மாநிலங்களில் ஒன் றான மணிப்பூர், பாஜகவின் வகுப்புவாத அரசியலால் ஒன்  றரை ஆண்டுகளாக பற்றி  எரிந்து வருகிறது. இந்த வன்முறைக்கு 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலை யில், பல லட்சம் மக்கள் சொந்த மாநிலத்தி லேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்ற னர்.

இந்நிலையில், 2 நாட்களுக்கு முன் காங்போக்பி மாவட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பாஜகவைச் சேர்ந்த  முன்னாள் எம்எல்ஏ யம்தோங் ஹெளகிப்பின் மனைவி சாருபாலா உயிரி ழந்தார். சைகுல் தொகுதியில் 2 முறை  காங்கிரஸ் கட்சி சார்பில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட யம்தோங் ஹெளகிப் கடந்த 2022இல் பாஜகவில் இணைந்தார். 

இந்நிலயில், ஹெளகிப் வீட்டில் மர்ம  நபர்கள் வீசிய குண்டு வெடித்ததில் யம்தோங் ஹெளகிப் உயிர் தப்ப, அவ ரது மனைவி சாருபாலா சம்பவ இடத்தி லேயே உயிரிழந்துள்ளார். முன்னாள்  எம்எல்ஏ மனைவியை குண்டுவீசி கொலை செய்யும் அளவிற்கு மாநி லத்தில் வன்முறை தீவிரமடைந்துள்ள நிலையில், மணிப்பூர் முழுவதும் மீண்டும்  பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

காசியாபாத்
வங்கதேசத்தினர் என்று கூறி இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்
இந்துத்துவா குண்டர்கள் அட்டூழியம்

வங்கதேச நாட்டில் வன்முறை யால் பதற்றமான சூழல் நிலவிக் கொண்டிருக்கும் நிலையில்,  அந்நாட்டில் சிறுபான்மையினராக வாழும் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக பாஜக ஆதரவு  “கோடி மீடியா”  ஊடகங்கள் செய்தி வெளி யிட்டன. இந்நிலையில், பாஜக ஆளும்  உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் தில் இந்து ரக்சா தளம் என்ற இந்துத் துவா அமைப்பினர் அங்குள்ள முஸ்லிம்  மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்ற னர். காசியாபாத் காவிரிநகர் பகுதியில்  150 முஸ்லிம் குடும்பங்கள் தற்காலிக குடி சைகள் அமைத்து வாழ்ந்து வரும் நிலை யில், “வங்கதேச நாட்டில் இந்துக்கள் மீது  நடத்தப்பட்டு வருகிறது. நீங்கள் இங்கு வாழக்கூடாது. வங்கதேசத்திற்கே செல் லுங்கள்” என இந்து ரக்சா தளம் அமைப்  பின் குண்டர்கள் பெண்கள், சிறுமிகள் என அனைவர் மீதும் தாக்குதல் நடத்தி  குடிசைகளை அடித்து நொறுக்கியுள் ளனர். புகாரின் பேரில் போலீசார் வழக்  குப்பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.