india

img

விவசாயிகள் - தொழிலாளர்கள் கூட்டுப் போராட்டம் தீவிரமாகும்

நாடு முழுவதும் விவசாயி களும் தொழிலாளர்க ளும் இணைந்து நடத் திய மாபெரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு செவ்வாய்க் கிழமை (நவம்பர் 26) விரிவான கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள் ளது. சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM) மற்றும் மத்திய தொழிற்சங் கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர்கள் வழியாக இந்த மனு அனுப்பப்பட்டுள்ளது.

போராட்டத்தின் பின்னணி

2020ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி தொழிலாளர் விரோத  நான்கு தொழிலாளர் சட்டங்களு க்கு எதிராக தொழிற்சங்கங்கள் தேசிய அளவிலான வேலை நிறுத்தத்தை நடத்தின. அதே நாளில் தான் விவசாயிகள் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடாளுமன்றம் நோக்கி பேரணி தொடங்கினர். அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளை நினைவுகூரும் வகையில் செவ் வாய்க்கிழமை நாடு முழுவதும் இந்த கூட்டுப் போராட்டம் நடத்தப் பட்டுள்ளது.

தற்போதைய  நெருக்கடி நிலை

o பயிர் சாகுபடிச் செலவும் பண வீக்கமும் 12-15% உயர்ந்துள்ளது. அதே போல குறைந்தபட்ச ஆதரவு விலை 2-7% மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது

o 2024-25ஆம் ஆண்டில் நெல்லுக் கான குறைந்தப் பட்ச ஆதார விலை (எம்எஸ்பி) வெறும் 5.35% உயர்வுடன் குவிண்டாலு க்கு ரூ.2,300 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது

o மண்டிகளில் இடப்பற்றாக்குறை காரணமாக நெல் கொள்முதல் தடைப்பட்டுள்ளது

o விவசாயிகள் தங்கள் உற்பத்திப்  பொருட்களை விற்க முடியாமல் தவிக்கின்றனர்

பெருநிறுவன ஆதரவு கொள்கைகள்

K டிஜிட்டல் வேளாண் திட்டம் (DAM) மூலம் நிலம் மற்றும் பயிர்க ளின் டிஜிட்டல் மயமாக்கல்

K ஒப்பந்த விவசாயத்தை ஊக்கு வித்தல்

K உணவு தானியங்களுக்கு பதி லாக வணிக பயிர்களுக்கு மாற்றும் முயற்சி

K கூட்டுறவுத் துறையின் கடன் வசதிகளை பெருநிறுவனங்களு க்கு திருப்பி விடும் முயற்சி

Kஇந்திய உணவுக் கழகம் (FCI) சேமிப்புக் கிடங்குகள், மத்திய கிடங்கு கழகம், வேளாண் விளை பொருள் சந்தைக் குழு (APMC) சந்தைகள் ஆகியவற்றை அதானி, அம்பானி போன்ற நிறுவ னங்களுக்கு வாடகைக்கு விடுதல் போன்றவைகள் பெருநிறுவன ஆதரவு கொள்கைகளாக உள்ளன. 

முக்கிய கோரிக்கைகள்

1. அனைத்து விவசாய பொ ருட்களுக்கும் C2+50% அடிப்படை யில் சட்டப்பூர்வ உத்தரவாதத்துடன் குறைந்தபட்ச ஆதரவு விலை

2. நான்கு தொழிலாளர் சட்டங் கள் ரத்து செய்யப்பட வேண்டும்

3.அனைத்து தொழிலாளர்களு க்கும் மாதம் ரூ.26,000 குறைந்த பட்ச ஊதியம்; ரூ.10,000 ஓய்வூதியம்

4.விவசாயிகள் மற்றும் விவ சாயத் தொழிலாளர்களின் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப் பட வேண்டும்.

5. பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொதுச் சேவைகளின் தனி யார்மயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும். 

6.டிஜிட்டல் வேளாண் திட்டம், தேசிய கூட்டுறவுக் கொள்கை ரத்து செய்யப்பட வேண்டும்.

7.நில கையகப்படுத்துதல் நிறுத் தப்பட வேண்டும்; லார் (LARR - நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் ஆகிய வற்றில் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மைக் கான உரிமை) 2013, வனவுரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்.

8.தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில்  (MGNR EGS) 200 நாட்கள் வேலை; ரூ.600  தினக்கூலி வழங்கப்பட வேண்டும்

கடந்த கால போராட்டங்கள்

Y 24 ஆகஸ்ட் 2023 - தல்ஹோத் ரா மைதானத்தில் (புதுதில்லி) முதல் அகில இந்திய தொழிலா ளர் - விவசாயி மாநாடு

Y நவம்பர் 2023 - மகாபாதவ் போராட்டம்

Y 16 பிப்ரவரி 2024 - பொது வேலை நிறுத்தம் மற்றும் கிராமிய பந்த்

“இது போன்ற தொடர்ச்சி யான போராட்டங்கள் நடத்தியும் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசியலமைப்பு சாசனத்தில் உறுதி செய்யப் பட்டுள்ள நீதி மற்றும் சமத்து வத்தை நிலைநாட்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்கள் தலையிட்டு, எங்கள் கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டும்” என விவசாயிகள் - தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.