புதுதில்லி, பிப்.6- தமிழகத்துக்கு வெள்ள நிவா ரண நிதியை வழங்குவதில் ஒன்றிய பாஜக அரசு மாற்றாந்தாய் மனப் பான்மையுடன் செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக எம்.பி.க்கள் மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். மக்களவையில் இவ்விவகா ரத்தை திமுக எம்பி ஆ. ராசா எழுப்பி னார். அப்போது, “மாநில பேரிடர் நிவாரண நிதி தொகுப்பில் உள்ள நிதி ரூ. 2,013 கோடியை மாநில அரசு பயன்படுத்தி இருக்கிறது. மாநில பேரிடர் நிவாரண நிதி தொகுப்புக்கு ஒன்றிய அரசு முன்கூட்டியே நிதி ஒதுக்கி உள்ளது” என்று ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித் யானந்த ராய் பதிலளித்தார்.
அதற்கு “மாநில பேரிடர் நிதி என்பது வேறு, தேசிய பேரிடர் நிதி என்பது வேறு. மாநில பேரிடர் நிதி என்பது அனைத்து மாநிலங்களுக் கும் ஒன்றிய அரசு வழங்குவது தான். மாநில பேரிடர் நிதி வழங்கி யதை வெள்ள நிவாரண நிதி வழங்கி யதாக ஒன்றிய அமைச்சர் குழப்பி கொள்கிறார்” என்று கூறிய ஆ. ராசா, “குஜராத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதி தரும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு பாரபட்சம் காட்டு கிறது.
தமிழ்நாடு அரசு ரூ. 37 ஆயி ரம் கோடி நிவாரண நிதி கேட்டது. ஆனால் இதுவரை ஒன்றிய அரசு நிவாரண நிதி எதனையுமே தர வில்லை” என்றார். திமுக தலைவர் டி.ஆர். பாலு, மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோரும் வெள்ள நிவாரணம் குறித்த பிரச்சனையை எழுப்பினார். இதில், டி.ஆர். பாலு பேசிக் கொண்டிருந்தபோது, தமிழ கத்தைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் எல். முருகன் இடையூறு செய்யும் விதமாக ஊடாக குறுக்கிட்டு குறுக் கிட்டு பேசிக் கொண்டிருந்தார்.
இதனால், ஆவேசமடைந்த டி.ஆர். பாலு, “உக்காருங்கள். ஏன் குறுக்கி டுகிறீர்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்? சபாநாயகர் அவர் களே.. இவர் ஏன் தலையிடுகிறார்? அவருக்கு ஒழுக்கம் என்றால் என்ன என்று சொல்லித் தாருங் கள். நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கே இவருக்கு தகுதி கிடையாது.
(எல். முருகன்)உட்கா ருங்கள். பொறுப்புள்ள ஒன்றிய அமைச்சராக இருப்பதற்கும் உங்களுக்கு தகுதி கிடையாது” காட்டமாக கூறினார். உடனே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த எல். முருகனை, டி.ஆ. பாலு அவமதித்து விட்டதாக பாஜக அமைச்சர்கள், எம்.பி.க்கள் கூப் பாடு போட்டனர். இதனால் கார சார விவாதம் எழுந்தது. அப்போது தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதி வழங்காததைக் கண்டித்து, தமி ழக எம்.பி.க்கள் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.