india

img

அயோத்தி விவகாரத்தில் தமிழக அரசை இந்து விரோதியாக சித்தரிக்க முயற்சி!

சென்னை, ஜன.29- அயோத்தி விழாவை நேரடி  ஒளிபரப்பு செய்வதற்கு அனுமதி  வழங்கவில்லை என்று தொடரப் பட்டுள்ள வழக்கானது, தமிழக அரசை இந்து விரோதியாக சித்த ரிக்கும் முயற்சி என தமிழ்நாடு டிஜிபி உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழா ஜன வரி 22 அன்று நடைபெற்றது. இதனை நேரடி ஒளிபரப்பு செய்ய  முயன்றதாகவும், ஆனால், தமிழ்  நாடு அரசு அதற்கு அனுமதி அளிக்க மறுத்து விட்டதாகவும், குறிப்பாக, இதுதொடர்பாக முதல் வர் மு.க. ஸ்டாலின் வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருந்தார் என்  றும் பாஜகவும், இந்து அமைப்பு களும் பொய்ப்பிரச்சாரம் மேற் கொண்டனர்.

அத்துடன், சென்னை உயர்நீதி மன்றம் மட்டுமன்றி, உச்ச நீதிமன் றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். குறிப்பாக, பாஜகவைச் சேர்ந்த வினோஜ் பி.செல்வம், உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச  நீதிமன்றம், நேரடி ஒளிரப்புக்கு அனுமதி கோரி விண்ணப்பித்தால் அதனை நிராகரிக்கக்கூடாது என உத்தரவிட்டு, இவ்வழக்கில் விரி வான விசாரணையை ஒத்திவைத்  தது. தமிழ்நாடு அரசு பதிலளிக்க வும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், திங்களன்று இந்த வழக்கு மீண்டும் விசார ணைக்கு வந்தது.

அப்போது தமிழ்  நாடு காவல்துறை தலைவர் சங்கர்  ஜுவால் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  மனுவில், “ராம ஜென்மபூமி யின் பிராண  பிரதிஷ்டை தின மான ஜனவரி 22 அன்று அன்ன தானம், ராமர் பற்றிய பஜனை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எந்த  விழாக்களையும், நிகழ்ச்சிகளை யும் அனுமதிக்கக் கூடாது என்று முதலமைச்சர் வாய்மொழியாக அறிவுறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதா ரமற்றவை, பொய்யானவை. ‘இல் லாத’ வாய்வழி ஒழுங்கு பற்றிய மனுதாரின் கூற்றுகள் அவரது கற்பனையின் விளைவே தவிர வேறல்ல. அவரது (வினோஜ் பி  செல்வம்) மனுவில் உள்ள 12 பத்தி களில், ஒன்பது பத்திகள் தமிழக  முதல்வரை அவதூறாகவும், மாநில  அரசின் நடவடிக்கைகளை விமர்  சிக்கவும் பயன்படுத்தப்பட்டுள் ளன.

மனுதாரர் தமிழக அரசை  இந்து விரோத அரசாக சித்தரித்  துள்ளார். இது முற்றிலும் தவறா னது மற்றும் கண்டிக்கத்தக்கது. அயோத்தியில் ராமர் கோவில்  நிகழ்வு தொடர்பான ஊர்வலங்கள், பஜனைகள், அன்னதானங்கள், நேரடி ஒளிபரப்பு மற்றும் பிற நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக மொத்தம் 288 மனுக்கள் அரசுக்கு வந்தன. இவற்றில் காவல்துறை மொத்தம் 248 நிகழ்வுகளை அனு மதித்தது, சென்னை உயர்நீதிமன் றம் உத்தரவுக்கு முன்னதாக அனு மதிக்கப்பட்ட 4 நிகழ்வுகளையும் சேர்த்தால், மொத்தம் 252 நிகழ்ச்சி களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்  ளது.

சென்னை, விருதுநகர், புதுக் கோட்டை, தஞ்சாவூர், நாமக்கல் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. காவல்துறை விதிமுறைகளை மீறி யதாக 13 வழக்குகள் பதிவு செய் யப்பட்டுள்ளன. ராமர் கோவில் நிகழ்ச்சி பல கோவில்களில் ஒளிபரப்பப்பட்டது. நேரடி ஒளிபரப்பைத் தவிர, மாநி லம் முழுவதும் பல கோவில்களில்  பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட் டன. மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் பூஜைகள் அல்லது  அர்ச்சனைகள் நடத்துவதில் எந்த  காவல்துறை அதிகாரியும் தலை யிடவில்லை” என்று கூறப்பட்டி ருந்தது. வினோஜ் பி செல்வம் சார்பில்  மூத்த வழக்கறிஞர் தாமா சேஷா த்திரி நாயுடு மற்றும் வழக்கறிஞர் ஜி.பாலாஜி ஆகியோர் ஆஜராகி னர்.

அவர்கள், தமிழ்நாடு அரசின் எதிர் பிரமாணப் பத்திரத்திற்கு, மறு  பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்வ தற்கு அனுமதி கோரினர். ஆனால், வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா, “நிகழ்வு (பிராண பிரதிஷ்டை) ஏற்கனவே முடிந்துவிட்டதால், வழக்கை மேலும் இழுக்க வேண்டாம்” என்  றார். தமிழக அரசின் சார்பில் ஆஜ ரான கூடுதல் அட்வகேட் ஜென ரல் அமித் ஆனந்த் திவாரி, இந்த வழக்கு ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், மனுதாரர் சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுக வேண்டும் என்றும் கூறினார்.