india

img

தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. 
தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப் படாததால், அவர்களுக்கான பல உரிமைகள் மறுக்கப்படுவதாகவும், எனவே அதனை சட்ட ரீதியாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இவ்வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கியது. அதில் தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க இயலாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதே நேரத்தில் தன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பது தொடர்பாக உயர் அதிகாரம் கொண்ட குழுவை அமைக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், சிறப்பு திருமண சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டுமா என்பதை முடிவெடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உள்ளது என உச்ச நீதிமன்ற தலைமை நீதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார்.