india

img

அதிமுக அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு : சிபிஎம்

சென்னை: சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: உள்ளாட்சித் தேர்தல் தொடர் பான வழக்கில் உச்சநீதிமன்றம் வெள்ளி காலை தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பின் மூலம் அஇஅதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை முறையான சட்டவிதிகளை நிறை வேற்றாமல் அலங்கோலமாக அறி வித்தது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உண்மையில், அஇஅதிமுக அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது.  கடந்த மூன்றாண்டுகளாக அஇ அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை முறையான அறிவிப்பு களை மேற்கொண்டு நடத்தாமல் சொத்தையான காரணங்களைக் கூறி தள்ளிப்போட்டு வந்துள்ளது. இதனால், தமிழக மக்களுக்கு ஏற்பட்ட இழப்பு ஏராளம். இந்நிலை யில் டிசம்பர் 2 அன்று  மீண்டும் மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் கால அட்டவணையை வெளி யிட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி அனைத்து சட்ட விதிமுறை களையும் நிறைவேற்றாமல் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அட்டவணை முறையற்றது என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டின. ஆனால், தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் இவைகளை பொருட்படுத்தாத நிலையில் உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் புதிய 9 மாவட்டங்களில் வார்டுகள் வரைமுறை செய்யாமல் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தற்போது தேர்தலை தள்ளி வைத்துக் கொள்கிறோம் என அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் மூலம் அதிமுக தனது தோல்வியை பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங் களில் தேர்தல் நடத்தக் கூடாது எனவும், இம்மாவட்டங்களில் வார்டு வரையறையினை ஒழுங்காக நிறைவேற்றி 4 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டுமெனவும், மீதமுள்ள மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் எனவும் தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் புதிதாக தேர்தல் கால அட்டவணை வெளியிடப் போவதாக அறி வித்துள்ளது.  ஆக மொத்தத்தில் தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு ஒரு கட்டம், மீதியுள்ள மாவட்டங்களுக்கு ஒரு கட்டம் - மாநகராட்சி, நகராட்சி,  பேரூராட்சிகளுக்கு இன்னொரு கட்டம் என தேர்தல் தொடர் கதையைப் போல நீண்டுகொண்டே போகும் நிலை உருவாகியுள்ளது.  ஏற்கனவே, பல தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்திய தமிழகத்தில் இந்த அவலநிலை அதிமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்தல் விதிமுறை பல மாதங்களுக்கு நீடிக்கப்பட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் கவனிக்கப்படாமல் போவதற்கும், பல கட்ட தேர்தலால், தேர்தல் நிர்வா கச் செலவிற்கு மக்களின் வரிப் பணம் கூடுதலாக வீணடிக்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.  இக்கேடு கள் அனைத்திற்கும் அதிமுக அரசின் நிர்வாக திறமையின்மை யும், தேர்தல் தோல்வி பயமுமே அடிப்படைக் காரணமாகும். 

தமிழ்நாடு தேர்தல் ஆணை யம் அஇஅதிமுக அரசின் கைப்பா வையாக செயல்படுவது நிரூபிக்கப் பட்டுள்ளது. இவ்வாணையம் தேர்தல்களை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துமா என்கிற  மக்களின் கேள்விக்கு தேர்தல் ஆணையம் பதில் சொல்லியாக வேண்டும்.  எனவே, தேர்தல் ஆணையம் இதற்கு பிறகாவது, அஇஅதிமுக அரசுக்கு அடி பணிந்து செயல்படுவதை கை விட்டு, முறையான, சட்டப்படியான விதிமுறைகள்படி தேர்தலை நடத்த முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

;