india

img

தமிழில் உடனுக்குடன் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள்.... தலைமை நீதிபதியிடம் திமுக மனு

புதுதில்லி:
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை உடனுக்குடன் மொழி பெயர்ப்பதற்கான தாய்மொழிகளின் உத்தேச முதல் பட்டியலிலேயே தமிழையும் சேர்க்க வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் திமுக மனு  அளித்துள்ளது.இதுதொடர்பாக திமுக தலைமையகம்வெள்ளியன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை உடனுக்குடன் ஏக காலத்தில் மொழி பெயர்ப்பதற்கான தாய்மொழிகளின் உத்தேச முதல் பட்டியலிலேயே தமிழையும் சேர்க்க வேண்டும் என்றுகழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் நாடாளுமன்றக்கழகக் குழுத்தலைவர் டி.ஆர்.பாலுவெள்ளியன்று(12.7.2019) உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து மனு கொடுத்து வலியுறுத்தினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு  தெரிவித்த கருத்துக்களைக் கூர்மையாகக் கேட்டுக் கொண்ட  தலைமை நீதிபதி,உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை ஏக காலத்தில் மொழி பெயர்த்து வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கும் தாய்மொழிகளின் முதல் பட்டியலிலேயே தமிழையும்சேர்ப்பது குறித்த கோரிக்கையை பரிசீலித்து, விரைவில் நல்ல முடிவை எடுப்பதற்கு ஒப்புக் கொண்டார்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;