பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள் ளிட்ட நாடுகளில் இருந்து ஆவணங்கள் எதுவும் இல்லாமல் வரும் முஸ்லிம் அல்லா தோருக்கு குடியுரிமை வழங்கும் வகையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) கடந்த 2019 டிசம்பரில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் மோடி அரசு நிறை வேற்றியது. இந்த சட்டம் நிறை வேற்றப்பட்ட 4 வருடங்களுக்குப் பிறகு மக்களவைத் தேர்தல் நடை பெறவுள்ள தற்போதைய சூழலில் கடந்த மார்ச் 11 அன்று சிஏஏ அம லுக்கு வந்ததாக ஒன்றிய மோடி அரசு திடீரென அறிவித்தது.
இந்நிலையில், சிஏஏவுக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஓவைசி உள்பட நாடு முழுவதி லும் இருந்து பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மொத்தம் 236 மனுக் களை ஒருங்கிணைத்து உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு செவ்வா யன்று விசாரணை மேற்கொண் டது.
மனுதாரர்கள் சார்பாக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ”சிஏஏ சட்டம் நிறைவேற் றப்பட்ட 3 ஆண்டுகள் 3 மாதங்க ளுக்குப் பிறகு தற்போது அறி விப்பாணை வெளியிடப்பட்டுள் ளது. சிஏஏ சட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதில் என்ன அவ சரம்? சிஏஏ சட்டத்திற்கு எதிரான வழக்கு விசாரணை முடிவு வரை சிஏஏ அறிவிப்பாணையை ஏன் நிறுத்தி வைக்கக் கூடாது?” என கேள்வி எழுப்பினார்.
இதைத் தொடர்ந்து ஆஜரான ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜென ரல் துஷார் மேத்தா,”குடியுரிமை சட்டத்திற்கு தடை கோரி 20 இடை யீட்டு மனுக்கள் தாக்கல் செய் யப்பட்டுள்ளன, இதற்கு பதில் அளிக்க கால அவகாசம் வேண் டும்” என கோரினார். அப்போது குறுக்கிட்ட கபில் சிபல், “அவகாசம் வேண்டும் என்றால் புதிய சட்டத் தின் கீழ் யாருக்கும் குடியுரிமை வழங்க மாட்டோம் என ஒன்றிய அரசு உறுதி அளிக்கட்டும்” என தெரிவித்தார்.
இதனை பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி சந்திரசூட், இடை யீட்டு மனுக்களுக்கு 3 வாரத் திற்குள் ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும். ஒன்றிய அரசின் பதில் மனுவுக்கு மனுதாரர்கள் விளக்க மனுவை ஏப்ரல் 2க்குள் தாக்கல் செய்ய வேண்டும். மீண்டும் வழக்கு ஏப்ரல் 9 அன்று விசாரிக்கப்படும்” என உத்தரவிட்டார்.