மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கிற்கு சனிக்கிழமையன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் முப்படைகளின் ஒருங்கிணைந்த ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. முன்னதாக, சுல்தான் தாரிக்கை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர்.