புதுதில்லி, நவ.30- இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு 2024-25 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை - செப்டம்பர்) மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது (GDP) 5.4 சதவிகிதமாக சரிந்துள்ளது. இது எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவு என்பதுடன், கடந்த இரண்டாண்டு களில் இல்லாத சரிவாகும். 2022-23 நிதியாண்டின், இதே இரண்டா வது காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 6.7 சத விகிதமாக இருந்தது. இதுவே 2023-24 நிதி யாண்டின் இரண்டாவது காலாண்டில் 8.1 சத விகிதம் அளவிற்கு வளர்ச்சி கண்டது.
ஆனால், 2024-25 நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் 5.4 சதவிகிதமாக குறைந் துள்ளது. தொடர்ந்து 6 சதவிகிதத்திற்கும் அதிக மான வளர்ச்சியில் இருந்த இந்திய பொரு ளாதாரம், 2-ஆவது காலாண்டில் 5.4 சதவிகி தமாக குறைந்தது, ஒன்றிய அரசின் நிதித் துறை அதிகாரிகளை அதிர்ச்சிக்கு உள் ளாக்கியிருக்கிறது. உற்பத்தி மற்றும் சுரங்கத் துறைகளின் பலவீனமான செயல்திறன் மற்றும் குறைந்து போன நகர்ப்புற நுகர்வு ஆகியவையே ஜிடிபி சரிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. உணவுப் பணவீக்கம் அதிகரிப்பு, அதிக கடன் வட்டி விகிதங்கள் மற்றும் அதற்கேற்ற சம்பளம் மற்றும் ஊதிய அதிகரிப்பின்மை ஆகியவை நகர்ப்புற நுகர்வோரை பாதித் துள்ளதன் விளைவாகவே தற்போது நாட் டின் ஜிடிபி 2 வருட சரிவை பதிவு செய்துள்ளது.
கடந்த காலாண்டில், வேளாண் துறையா னது, 1.7 சதவிகிதத்திலிருந்து 3.5 சதவிகித மாக வளர்ச்சி அதிகரித்துள்ளது. எனினும், உற்பத்தித் துறை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலா ண்டில் 14.3 சதவிகிதமாக இருந்த உற்பத்தித் துறை, தற்போது வெறும் 2.2 சதவிகித வளர்ச்சியையே பதிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு வளர்ச்சிப் பாதையில் இருந்த சுரங் கத் துறையோ, இப்போது -0.1 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. கட்டுமானத் துறையானது, 2024-25 நிதி யாண்டின் இரண்டாவது காலாண்டில் 7.7 சத விகிதம் வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஆனால், முந்தைய காலாண்டின் 10.5 சதவிகித வளர்ச்சி மற்றும் கடந்த ஆண்டின் 13.6 சதவிகி தத்தை ஒப்பிடுகையில் கட்டுமானத் துறை யும் சரிவைக் கண்டுள்ளது. அதேபோல சேவைத் துறை இரண்டாவது காலாண்டில் எதிர்பார்த்ததை விட மெதுவாக 7.1 சதவிகி தம் அளவிற்கே வளர்ச்சி கண்டுள்ளது. முந் தைய காலாண்டில் 7.2 சதவிகிதம் மற்றும் கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 6 சதவிகி தம் அளவிற்கு சேவைத்துறை வளர்ச்சி கண்டி ருந்தது.
ஏற்றுமதி 2.8 சதவிகிதமாகவும், இறக்குமதி 2.9 சதவிகிதமாகவும் சுருங்கி யுள்ளது. நுகர்வு தேவையை அளவிடும் தனிநபர் இறுதி நுகர்வு செலவைப் பொறுத்தவரை, ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 6 சதவிகிதம் அதிகரித்து ரூ. 24.82 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய காலாண்டில் இது 7.4 சதவிகிதம் மற்றும் கடந்த ஆண்டு இதே காலாண்டில் 2.6 சதவிகிதம் வளர்ச்சி யைக் கண்டிருந்தது. தற்போதைய இந்த அதிகப்படியான நுகர்வுச் செலவில் பெரும் பகுதி கிராமப்புற நுகர்வோர் மூலம் மேற் கொள்ளப்பட்டுள்ளது.