india

தீக்கதிர் முக்கிய செய்திகள்

வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு திசையில் நகர்ந்து  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள் ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக்கடலில் வடக்கு ஒடிசாவின் கலிங்கப்பட்டினத்துக்கு 310 கிமீ - கோபால்பூ ருக்கு 260 கிமீ கிழக்கு-தென் கிழக்காக மையம்  கொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்ட லத்தால், ஒடிஷா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்  நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அதீத கன மழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுதில்லி
இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு?

சமீபத்தில் வெளிநாட்டிற்கு பயணம்  மேற்கொண்டு இந்தியா திரும்பிய  இளைஞர் ஒருவருக்கு குரங்கு  அம்மை நோய் இருப்பதாக சந்தேகிக் கப்படுகிறது. அவரிடம் குரங்கம்மை நோய்க்கான சந்தேகத்திற்கிடமான அறி குறிகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இந்த தக வலை ஒன்றிய சுகாதார அமைச்சகம்  ஞாயிறன்று வெளியிட்ட செய்திக்குறிப் பில் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் அந்த இளைஞர் யார்? எந்த மாநிலத்தைச்  சேர்ந்தவர்? அவர் எந்த நாட்டில் இருந்து  வந்தார்? போன்ற தகவல்களை ஒன்றிய  சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவிக்க வில்லை. குரங்கு அம்மை அறிகுறி உள்ள  நோயாளி மருத்துவமனையில் தனிமைப்  படுத்தப்பட்டுள்ளார் என்றும், தற்போது அவர் உடல்நிலை சீராக உள்ளது என்று மட்டுமே தகவல் வெளியாகியுள்ளது. 

திருவனந்தபுரம்
கேரளத்தில் முந்திரி தொழிலாளர்களுக்கு 
20 சதவிகிதம் போனஸ்; ரூ.10,500 முன்பணம்

கேரளத்தில், முந்திரி தொழிலா ளர்களுக்கு ஓணம் பண்டி கைக்கு 20 சதவிகிதம் போனஸ்  மற்றும் முன்பணமாக ரூ.10,500 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் வி.சிவன்குட்டி தலைமை யில் நடைபெற்ற தொழில்துறை உறவு கள் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக் கப்பட்டது. இந்தத் துறையில் மாதாந்திர ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு போன ஸாக மூன்று மாத சம்பளத்திற்கு இணை யான தொகை வழங்கப்படும். போனஸ்  தொகை செப்டம்பர் 10ஆம் தேதிக்குள்  விநியோகிக்கப்படும். கேரளாவின் மிகப்  பெரிய பாரம்பரிய வேலைவாய்ப்புத் துறையான முந்திரித் துறையில் தொழி லாளர்களை அரவணைக்கும் அணுகு முறையை அரசு எப்போதும் கடைப்பிடித்து வருவதாக அமைச்சர் வி.சிவன்குட்டி கூட்  டத்தில் சுட்டிக்காட்டினார்.ணமாக ரூ.10,500 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்தில், தொழிலாளர் துறை செய லர் கே.வாசுகி, கூடுதல் தொழிலாளர் ஆணையர் (ஐஆர்) கே ஸ்ரீலால், மண்டல  இணை தொழிலாளர் ஆணையர் (கொல்  லம்) டி.சுரேஷ் குமார் , துணை தொழிலா ளர் ஆணையர் (தலைமையகம்) கே.எஸ்  சிந்து, முந்திரி சிறப்பு அதிகாரி ஷிரிஷ்  கே, தொழிற்சாலைகள் மற்றும் கொதி கலன்கள் இயக்குநர் பி.பிரமோத், கேரள  மாநில முந்திரி வளர்ச்சிக் கழக தலைவர்  எஸ்.ஜெயமோகன், நிர்வாக இயக்குநர் சுனில் ஜான் கே, கேபெக்ஸ், தலைவர் எம்  சிவசங்கரபிள்ளை, தனியார் தொழிற் சாலை முதலாளிகள் மற்றும் தொழிலா ளர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பாட்னா
24 மணிநேரத்தில் 
மேலும் ஒரு ரயில் விபத்தில் சிக்கியது

நாட்டில் முன்னெப்பொழுதும் இல்  லாத வகையில் மோடி பிரதமர்  ஆன பின்பு வாரத்திற்கு 2 அல்  லது 3 ரயில் விபத்து சம்பவங்கள் அரங் கேறி வருகின்றன. சனியன்று இந்தூர் - ஜபல்பூர் விரைவு ரயிலின் இரண்டு பெட்டிகள் ஜபல்பூர் ரயில் நிலையம் (மத்தியப்பிரதேசம்) அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளான நிலையில், நல்வாய்ப்பாக இந்த பயணிகளுக்கு எந்த பாதிப்பு ஏற்படவில்லை. 

இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் தில்லியில் இருந்து இஸ்லாம் பூர் (மேற்கு வங்கம்) நோக்கிச் சென்று கொண்டு இருந்த மகத் விரைவு ரயிலின்  இணைப்பு பெட்டிகள் (எஸ்-6, எஸ்-7), பீகார் மாநிலம் பக்ஸர் மாவட்டத்தின் திவினிகஞ்ச் மற்றும் ரகுநாத்பூருக்கு இடையே ஞாயிறன்று காலை 11.08 மணிக்கு தனித்தனியாக பிரிந்து சென்று விபத்தில் சிக்கின. லோகோ பைலட் (ரயில் ஓட்டுநர்) சுதாரித்து ரயிலை நிறுத்தி யதால், இந்த விபத்தில் பயணிகளுக்கு பெரியளவில் காயம் எதுவும் ஏற்பட வில்லை. தொடர்ச்சியாக ரயில்கள் விபத்தில் சிக்கி வருவதால், பயணிகள் ரயிலில் பயணிக்கவே அஞ்சி வருகின்ற னர்.