india

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பட்டியலின மக்களுக்கு கிடைக்காத சிறப்பு நிதி
அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை, ஆக. 30 - தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக் கான சிறப்பு நிதியை முறையாக வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில் ஒன்றிய - மாநில அரசுகள் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை யிட்டுள்ளது.

இதுதொடர்பாக ராஜகுரு என்பவர் தொடர்ந்த வழக்கில், “பட்டியலின மக்களுக்கான சிறப்பு நிதி கிடைக்கா மல் மாணவர்களின் கல்வி, வீடு கட்டு பவர்கள், தொழில் முனைவோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஒன்றிய - மாநில அரசுகள் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

வேட்டி - சேலைத் திட்டம்
6600 மெட்ரிக் டன் நூல் வாங்க டெண்டர்! 

சென்னை, ஆக. 30 - 2025-ஆம் ஆண்டு பொங்கல் பண்டி கைக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு, முன் பணமாக ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப் பட்டது. 

இந்நிலையில், இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தில் 6600  மெட்ரிக் டன் நூல் வாங்க கைத்தறித் துறை டெண்டர் கோரியது. விசைத்தறி சேலை களுக்கு 3050 மெ.டன் பருத்தி கலர் கோன் நூல் வாங்கவும், விசைத்தறி வேட்டிகளுக்கு 3597 மெ.டன் பாலிகாட் கிரே பாவு நூல் வாங்கவுமாக மொத்தம் 6600 மெட்ரிக் டன் நூல் வாங்க கைத்தறித்துறை டெண்டர் கோரியுள்ளது. பொங்கலுக்கு 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் சேலைகளும், 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் வேட்டிகளும் வழங்கப்பட உள்ளன.

முன்னாள் இணைஇயக்குநர் மணிமாறன் மறைவு 
முதல்வர் இரங்கல்!

சென்னை, ஆக. 30 - தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் முன்னாள் இணை இயக்குநரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உறவினருமான எல். மணிமாறன் திடீர் உடல் நலக்குறைவு கார ணமாக வெள்ளியன்று (ஆக.30) கால மானார். இந்நிலையில், எல். மணி மாறன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்ச ராக இருந்த நேரத்தில் அவரது அலுவல கத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் செய்தி மக்கள் தொடர்பு துறையில் பல் வேறு பொறுப்புகளிலும் திறம்படப் பணி யாற்றியவர். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் அவருடன் பணி யாற்றிய சக செய்தி மக்கள் தொடர்புத் துறை பணியாளர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு
விசாரணை தொடரும்

சென்னை, ஆக. 30 - டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையை ரத்து செய்ய முடியாது  என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கிலேயே சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், ஆறு மாதத்தில் வழக்கை நடத்தி முடிக்கவும், சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு  நீதிமன்றத்திற்கு நீதிபதி சேஷசாயி உத்தரவு பிறப்பித்துள்ளார்.