india

img

தோழர் நிகுயென் பூ ட்ரோங்கிற்கு சீத்தாராம் யெச்சூரி செவ்வணக்கம்

வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் தோழர் நிகுயென் பூ ட்ரோங் சமீபத்தில் காலமானார். அவரது மறைவையொட்டி வியாழனன்று தில்லியில் உள்ள சோசலிச வியட்நாம் குடியரசின் தூதரகத்திற்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், கட்சியின் சர்வதேச துறை  தலைவருமான எம்.ஏ.பேபி, மத்திய செயற்குழு உறுப்பினர் ஆர்.அருண்குமார் ஆகியோர் தோழர் நிகுயென் உருவப்படத்திற்கு மலர்வளையம் வைத்து செவ்வணக்கம் செலுத்தினர். பதிவேட்டிலும் தங்களது இரங்கல் குறிப்புகளை எழுதினர். இந்நிகழ்வின்போது வியட்நாம் குடியரசின் தூதர் உடனிருந்தார்.