india

img

5 நிமிடம் சிக்னலில் நின்றால் 5சிகரெட் பிடிப்பதற்கு சமம்-மருத்துவ ஆய்வில் அதிர்ச்சி தகவல்

5 நிமிடம் டிராபிக் சிக்னலில் நின்றால் 5 சிகரெட் பிடிப்பதற்கு சமம். புகைபிடித்தலை விட காற்று மாசுபாட்டால் மாரடைப்பு அதிகம் ஏற்படுவதாக மருத்துவ ஆய்வு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. 
பெங்களூருவில் உள்ள ஜெயதேவா இதயநோய் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் செயின்ட்ஜான்ஸ் ஆராய்ச்சி மையம், நிம்கான்ஸ் அமைப்பு ஆகியவை 2 ஆண்டுகளாக இதயபாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் நாளை சர்வதேச இதய தினம் நாளை (செப்டம்பர் 29) அனுசரிக்கப்படுவதையொட்டி இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
40 வயதுக்கு உட்பட்ட இதய ரத்தக்குழாய் நோயால் பாதிக்கப்பட்ட 2,400 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில்  26 சதவீதம் பேர் தனியார் நிறுவனங்களில் பல்வேறு பணிகளில் இருப்பவர்கள். 15 சதவீதம் பேர் விவசாயிகள் மற்றும் தினக்கூலி ஊழியர்கள். 12 சதவீதம் பேர் தொழில்நுட்ப ஊழியர்கள். 6.5 சதவீதம் பேர் குடும்ப பெண்கள். 24 சதவீதம் பேர் டிரைவர்கள் ஆவர்.
இந்த ஆய்வில் புகைபிடிப்பதை விட காற்று மாசு காரணமாகவே அதிக மாரடைப்புகள் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. 5 நிமிடம் ஒருவர் டிராபிக் சிக்னலில் நின்றிருந்தால் 5 சிகரெட் புகைப்பதற்கு சமம். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 35 சதவீதம் பேருக்கு காற்று மாசினால் இதயநோய் ஏற்பட்டுள்ளது. 
இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட குழுவில் இடம் பெற்ற ஜெயதேவா இதயநோய் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் மஞ்சுநாத் கூறியதாவது:-  எங்கள் ஆய்வில் புகை பிடிப்பவர்களை விட காசு மாற்றால் பாதிக்கப்பட்டவர்கள்தான் அதிக அளவில் இதய நோய்க்கு ஆளாகி உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. ஒரு லட்சம் பேரில் 200 பேருக்கு காற்று மாசினால் இதய நோய் ஏற்படுகிறது. காற்று மாசு உடலின் ரத்தத்தில் உள்ள ஹீமோ குளோபினிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதாவது ஹீமோ குளோபினில் கார்பாக்சி அமிலத்தின் அளவு அதிகமாக இருக்கிறது. இது, பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக வாகன டிரைவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக இருக்கிறது.  இந்தியாவில் அதிக இளைஞர்கள் காற்று மாசினால் இதய நோய்க்கு ஆளாகிறார்கள். அது, மாரடைப்பை உருவாக்குகிறது.
ஒரு நபர் டிராபிக் சிக்னலில் 5 நிமிடம் நின்றிருந்தால் அதனால் ஏற்படும் காற்று மாசு 5 சிகரெட் புகைப்பதற்கு சமமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. முன்பெல்லாம் காற்று மாசுவினால் சுவாசக் கோளாறு நோய்கள் ஏற்பட்டன. ஆனால், இப்போது இதயத்தை அது பாதிக்க செய்வது ஆய்வில் தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார். 
 

;