india

img

பிரச்சாரத்தை சீர்குலைக்க முயற்சி

மேற்கு வங்கத்தின் பல மக்கள வைத் தொகுதிகளில் இடது முன்னணி வேட்பாளர்களின் பிரச்சாரங்களை சீர் குலைக்கும் முயற்சி களை காவல்துறை மூலம் மேற்கொள்ளப் படுகிறது.

வியாழனன்று மூன்று தொகுதிகளில் வேட்பாளர்களின் பிரச்சாரத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். அதில் கொல் கத்தா(தெற்கு) தொகுதியில் வேட்பாளர் சாய்ரா ஷா ஹலீம் மற்றும் தொண்டர்க ளை முற்றுகையிட்ட காவல்துறையினர், மேலும் நகர அனுமதிக்க மாட்டோம் என்று முரண்டு பிடிக்கத் தொடங்கினர். குறிப்பிட்ட பகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதியில்லை என்று காவல் துறையினர் வாதிட்டார்கள்.

ஆனால், தேர்தல் ஆணையத்திடம் பெற்ற முறையான அனுமதியை ஆவ ணங்களாகக் காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சாய்ரா ஷா ஹலீம், தங்கள் பிரச்சாரத்தைத் தடுக்க சட்டரீதியான காரணங்கள் எதுவும் இல்லை என்று பதிலடி கொடுத்தார். முறையான அனுமதிக்கான ஆவ ணங்களைக் காட்டிய பிறகும், காவல் துறையினர் அனுமதிக்காததைக் கண்டு,  அங்கிருந்த பொது மக்களும் வேட்பா ளருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த னர். இதைக் கண்டு அரண்டு போன காவல்துறை வேறு வழியின்றி, பிரச்சா ரத்தைத் தொடர விட்டனர்.