புதுதில்லி, செப். 26 - சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில், தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதை யடுத்து, 471 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு, செந்தில் பாலாஜி வியாழனன்று இரவு புழல் சிறையிலிருந்து விடுதலை யானார்.
அவருக்கு சிறை வாயில் முன்பு திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பும் வழங்கியும் வரவேற்பு அளித்தனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்கு வரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக 3 மோசடி வழக்குகளை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் பதிவு செய்திருந்தனர்.
பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது!
இந்த வழக்குகளை அடிப்படையாக வைத்து, அமலாக்கத்துறையினரும் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரி மாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி, கடந்த 2023 ஜூன் 14-ஆம் தேதி கைதுசெய்தனர்.
இந்தக் கைதின் போதே நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக, மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் புழல் சிறையில் இருந்த படியே அவர் சிகிச்சை பெற்று வந்தார். தனக்கு ஜாமீன் கோரி, விசாரணை நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் மனுக்களைத் தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது.
15 மாதத்திற்குப் பின் உச்சநீதிமன்றம் ஜாமீன்
இதையடுத்து அவர் உச்ச நீதி மன்றத்தை நாடினார். அங்கு நடைபெற்று வந்த விசாரணையின் முடிவிலேயே, செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதிகள் அபய் எஸ். ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ கூறியதாவது:
“செந்தில் பாலாஜி கடந்த 15 மாதங் களுக்கும் மேலாக விசாரணைக் குற்ற வாளியாகவே இருந்ததால் அடிப்படை உரிமையைக் கருத்தில் கொண்டு அவ ருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணைக்கு இன்னும் நீண்ட “செந்தில் பாலாஜி கடந்த 15 மாதங் களுக்கும் மேலாக விசாரணைக் குற்ற வாளியாகவே இருந்ததால் அடிப்படை உரிமையைக் கருத்தில் கொண்டு அவ ருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணைக்கு இன்னும் நீண்ட காலம் எடுக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கப் பட்டுள்ளது.
அடுக்கடுக்கான நிபந்தனைகள்
ஜாமீனுக்காக, செந்தில் பாலாஜிக்கு ரூ. 25 லட்சம் மதிப்பில் இரண்டு பேர் ஜாமீனுக்காக, செந்தில் பாலாஜிக்கு ரூ. 25 லட்சம் மதிப்பில் இரண்டு பேர் ஜாமீன் உத்தரவாதம் வழங்க வேண்டும், திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகி கையெழுத்திட வேண்டும், அமலாக்கத்துறை மற்றும் விசாரணை நீதிமன்றத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்; வழக்கின் சாட்சி யங்களை கலைக்கும் நடவடிக்கை யில் ஈடுபடக் கூடாது, சாட்சிகளை நேரில் சந்தித்துப் பேசக் கூடாது; வழக்கில் வாய்தா கேட்கக் கூடாது; வெளிநாடுகளுக்கு செல்லாத வகையில் பாஸ்போர்டை ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது” என்றார்.
அமைச்சராகத் தடையில்லை?
செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏதேனும் நிபந்தனை விதித்துள்ளதா என்ற செய்தி யாளர்கள் கேள்விக்கு, “அது மாதிரியான எவ்வித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவதற்கு எத்தகைய சட்டப்பூர்வத் தடையும் இல்லை” என்று வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்தார். மேலும் அவர், “இந்தத் தீர்ப்பின் மூலம் அரசியலமைப்பே பிரதான மானது என்று உச்ச நீதிமன்றம் நிறுவியுள்ளது” என வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ குறிப்பிட்டார்.
உச்சநீதிமன்றத்தில் நடந்த விவாதம்
முன்னதாக, உச்சநீதிமன்ற விசாரணையின்போது, செந்தில் பாலாஜி தரப்பில், முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி, ராம் சங்கர் உள்ளிட்டோர் ஆஜ ராகினர். அவர்கள், “வழக்கிற்கு சம்பந்தமில்லாத வாதங்களை எல்லாம் அமலாக்கத்துறை முன்வைக்கிறது. பிஎம்எல்ஏ சட்ட பிரிவில் ஜாமீன் வழங்கக் கூடாது என்ற விதி இல்லை. மனுதாரர் 13 மாதங்களாக சிறையில் இருக் கிறார். தற்போது வரை இந்த வழக்கில் விசாரணை தொடங்க வில்லை. விசாரணை எப்போது தொடங்கும் என்பதும் தெரிய வில்லை” என வாதிட்டனர்.
ஆனால், “அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகும், செந்தில் பாலாஜி எம்எல்ஏ பொறுப்பில் உள்ளதால், அவர் செல்வாக்கு மிக்க நபராகவே (influential person) உள்ளார்; வழக்கு தொடர்புடைய சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளது. எனவே, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. மேலும், விசாரணையின்போது செந்தில் பாலாஜி உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை” என்று அமலாக்கத்துறை கூறியது. இங்கும் சுமார் 2 மாதத்திற்கும் மேலாக 12 முறை அமலாக்கத்துறை வழக்கை இழுத்தடித்தது.
அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் கண்டிப்பு
இதனிடையே, இந்த வழக்கில் ஆகஸ்ட் 20 அன்று தேதி குறிப்பிடாமல் வழக்கை தள்ளி வைத்த நீதிபதிகள் ஏ.எஸ். ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அமர்வு, 37 நாட்களுக்கு பிறகு வியாழக் கிழமையன்று (செப்.26), செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது.
தீர்ப்பை அறிவித்த நீதிபதி ஏ.எஸ். ஓஹா, “ஒருவருக்கு ஜாமீன் கொடுக்க மறுக்கிறீர்கள்.. அதை எதிர்க்கிறீர்கள்.. அதே சமயம் விசாரணையையும் நடத்தாமல் காலம் தாழ்த்துகிறீர்கள். இவ்வாறு ஜாமீனும் கொடுக்க முடியாது. விசாரணையையும் தாமதம் செய்வோம் என்று சொல்வது சரியாக இருக்காது. இரண்டிற்கும் நீங்கள் ஆசைப்பட முடியாது. கடுமையான ஜாமீன் விதிகள் மற்றும் விசாரணையில் தாமதம் ஆகியவற்றை ஒன்றாக பயன் படுத்த முடியாது” என்றார்.
மேலும், “விசாரணைக் கைதியாக இருப்பதால் அடிப்படை உரிமை கருதி நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்படுவதாக தெரிவித்த நீதிபதி ஓஹா, வழக்கில் 2,500-க்கும் மேற்பட்டோர் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவர்களை விசாரிக்க பல ஆண்டுகள் ஆகும் என்பதால், அதுவரை ஒருவரை விசாரணைக் கைதியாகவே சிறையில் வைத்திருக்க முடியாது” என்றும் தெரிவித்தார்.