india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மக்களவைத் தேர்தல் மற்றும் அதனோடு சேர்ந்து நடைபெற உள்ள சில சட்ட மன்றங்களின் தேர்தல் பாதுகாப்புக்கு 3.40 லட்சம் மத்திய பாதுகாப்புப் படையினரை பணி யமர்த்த ஒன்றிய அரசுக்கு தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல் பத்திரம் தொடர்பான உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு, தேர்தல் ஜனநாயகத்தில்  நல்ல விளைவை ஏற்படுத்தும் தீர்ப்பு என மூத்த  வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் பாராட்டு தெரி வித்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரும், நடிகையுமான மிமி சக்ரவர்த்தி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, ராஜினாமா கடி தத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியிடம் அளித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவ காரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் மேல் முறையீட்டு மனு இறுதி விசாரணையை உச்சநீதி மன்றம் வரும் 20-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரும், சிவ சேனாவின் (உத்தவ்) மூத்த தலைவரு மான பாபன் கோலாப் கட்சியில் இருந்து விலகி யுள்ளார்.

பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி தொடங்க விருந்த தில்லி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்  தொடர், மார்ச் முதல் வாரம் தொடங்க வாய்ப்புள் ளது என தில்லி அரசு அறிவித்துள்ளது.

பாஜக கூட்டணியுடனான இணைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஒன்றிய அமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த  தலைவருமான கிஷோர் சந்திர தியோ வியாழ னன்று கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் 17 லட்சம் ரூபாய்  மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப் பட்டது.

ஐஎஸ்ஐஎஸ் சதி வழக்கு தொடர்பாக மகா ராஷ்டிராவில் 8-க்கும் மேற்பட்ட இடங்க ளில் சோதனை நடத்திய என்ஐஏ, இதுதொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளது.

திருப்பதி உயிரியல் பூங்காவில் சிங்கம் இருந்த  வளாகத்துக்குள் குதித்து செல்பி எடுக்க முயன்ற  பார்வையாளர் உயிரிழந்தார். பார்வையாளர் செய்த தவறுக்கு பாதுகாப்பு கூண்டில் சிங்கம் அடைக்கப்பட்டது.

அகமதாபாத்
2 ஆண்டுகளில் 
32 பேருக்கு மட்டுமே வேலை வழங்கிய 
குஜராத் அரசு

பாஜக ஆளும் குஜராத் மாநிலத்  தில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் காங்கி ரஸ் எம்எல்ஏ,”மாநிலத்தில் வேலை வாய்ப்பு வழங்கும் நிலைமை மோசமாக உள்ளது. அரசு வேலைக்காக பல லட்சம்  பேர் காத்துக் கொண்டிருக்கும் நிலை யில், கடந்த 2 ஆண்டுகளில் வேலை வாய்ப்பு தொடர்பான அரசின் நடவடிக் கைகளை தாக்கல் செய்ய வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்தார். 

இதற்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் பல்வந்த்சிங் ராஜ்புத், “கடந்த  2 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் 2.38 லட்சம் இளைஞர்கள் வேலைக்காக  பதிவு செய்துள்ளனர். 32 பேருக்கு  மட்டுமே அரசு வேலை வழங்கப்பட்டுள் ளது. 32 இளைஞர்களில் அகமதா பாத்தை சேர்ந்தவர்கள் 22 பேர், பவ நகரை சேர்ந்தவர்கள் 9 பேர். மற்றொரு வர் காந்தி நகர்” என எவ்விதச் சலன மின்றி கூறினார்.

குஜராத் பாஜக அமைச்சரின் இந்த  கருத்து அம்மாநிலத்தில் மட்டுமின்றி நாடு  முழுவதும் கடும் சர்ச்சையை கிளப்பி யுள்ளது.

ஜம்மு
தேசிய மாநாட்டு கட்சி 
“இந்தியா” கூட்டணியிலேயே நீடிக்கிறது

ஜம்மு-காஷ்மீரின் முக்கிய பிராந் திய கட்சியான தேசிய மாநாட்டு கட்சி மாநில சூழலுக்கு ஏற்ப  தனித்து போட்டியிடப் போவதாக அக் கட்சியின் தலைவரான பரூக் அப்  துல்லா, மூத்த வழக்கறிஞரான கபில்  சிபலின் யூடியூப் சேனலில் அறிவித்தார். உடனே ஊடகங்கள் “இந்தியா” கூட்ட ணியில் மேலும் விரிசல், தேசிய மாநாட்டு  கட்சி விலகிவிட்டது என ஜெட் வேகத்தில்  செய்திகளை டிரெண்ட் ஆக்கின.

இந்நிலையில், இந்த விவகாரம்  தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலா ளர் ஜெய்ராம் ரமேஷ்,“ஒவ்வொரு கட்  சிக்கும் அதன் சொந்த வரம்புகள் உள்  ளன. அதற்கேற்ப முடிவுகள் எட்டப்படும்.  எனினும் “இந்தியா” கூட்டணியில் பேச்சு வார்த்தை தொடர்ந்து வருகிறது. தேசிய  மாநாட்டு கட்சியும், பிடிபியும் (மெஹபூபா  முப்தி) இந்திய கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகிக்கின்றன” என கூறினார்.