உயர் கல்வித் தேர்வுகளை ஊழல்மயமாக்கிய தேசிய தேர்வு முகமையை உடனே கலைக்க வேண்டும் என் றும், மாநில அரசாங்கங்களும், பல் கலைக் கழகங்களும் தேர்வுகள் நடத்த அதிகாரம் அளிக்கப்பட வேண் டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வி. சிவதாசன் வலியுறுத்தினார்.
பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப்பின் முதல் கூட்டத்தொடர் நடைபெற்று வரு கிறது. மாநிலங்களவையில் குடி யரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது டாக்டர் வி.சிவதாசன் பேசியதன் சாராம்சம்:
ராமர் பெயரால் ஊழல்
இந்தியாவில், உங்கள் அரசாங் கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஊழலுக்குச் சான்றுகளை எங்கே சென்றாலும் பார்க்க முடியும். ராம னின் பெயரைக் கூட பணம் சம்பா திப்பதற்காகவே பயன்படுத்தியவர் கள்தான் இந்த ஆட்சியாளர்கள்.
நீங்கள் புதிதாகக் கட்டிய கோவி லின் கூரை ஒழுகுகிறது. இந்தக் கோவில் கட்டுமானத்திற்காக இவர் கள் செலவு செய்த தொகை 1800 கோடி ரூபாயாகும். பிரதமர் நரேந்தி ரமோடிதான் திறந்து வைத்தார்.
ராமர் கோவிலுக்குச் செல்லும் பாதையின் லட்சணம் எப்படியி ருக்கிறது தெரியுமா? பாதை முழு வதும் பெரிய பள்ளங்கள் காணப் படுகின்றன. இந்தப் பாதையைக் கட்டுவதற்கான செலவினம் என் பது 845 கோடி ரூபாயாகும். இதனை யார் திறந்து வைத்தது? பிரதமர் நரேந்திர மோடிதான்.
இந்த அரசாங்கம் எந்த அள விற்கு ஊழலில் உழலும் என்ப தனை இந்நிகழ்வுகள் வெளிச்சத் திற்குக் கொண்டு வந்திருக்கின் றன. ராம பிரான் ஊழல் அர சாங்கத்தைத் தண்டித்திருக்கிறார் என்று சாமானிய மக்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ராமர் கோவில் இருக்கும் பைசாபாத் தொகுதியிலேயே பாஜக தோற்க டிக்கப்பட்டிருக்கிறது.
அயோத்தியைத் தொடர்ந்து காசி, மதுரா இருக்கிறது என்று பாஜகவினர் கூறிக் கொண்டிருக்கி றார்கள். மதுராவில், 2021இல் கட்டப் பட்ட பெரிய தண்ணீர் தொட்டி தற் போது இடிந்துவிழுந்து அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார் கள். பலர் காயம் அடைந்திருக்கி றார்கள். இது கட்டப்பட்டதிலும் பெரும் ஊழல் நடந்திருப்பது தெளிவாகி றது.
மதவெறியும் ஊழலும்
மதவெறி தத்துவம், பொருளா தார ஊழலுக்கும் இட்டுச்செல்லும் என்பதையும் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
தில்லி விமான தளங்களில் ‘டெர் மினல் 1’ முறையான பராமரிப் பும் கவனமும் இல்லாததால் சரிந் துள்ளது. தில்லி விமான நிலை யத்தின் பாதிப்பைத் தொடர்ந்து குஜ ராத்தில் ராஜ்கோட் விமான தளம் சரிந்துள்ளது. மத்தியப் பிரதேசத் தில் ஜபல்பூர் விமான தளம் சரிந் துள்ளது. இவற்றைக் கட்டுவதற் காக அவர்கள் 450 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள். இவையும் பிரதமர் நரேந்திரமோடி யால் திறந்து வைக்கப்பட்டதுதான்.
மும்பை அடல் சேதுவிற்கு என்ன நடந்தது? அடல் என்றால் உறுதி என்று பொருள். ஆனால் அடல் சேது உறுதியாக இல்லை. அடல் சேதுவில் வெடிப்புகள் காணப்படு வதாக செய்திகள் வந்துகொண்டி ருக்கின்றன. இதற்கு அவர்கள் செய்த செலவு என்பது 17,480 கோடி ரூபாயாகும். இதனைத் திறந்து வைத்ததும் பிரதமர் நரேந்திர மோடி தான்.
கடந்த இருபது நாட்களில் மட் டும் பீகார் மாநிலத்தில் ஆறு பாலங் கள் இடிந்து விழுந்திருக்கின்றன.
கதறும் மாணவர்கள்
கல்வித் துறையில் நிலைமை கள் எவ்வாறு இருக்கின்றன? ‘நீட்’ (NEET), நீட்(neat)டாக இல்லை. ‘நீட்’ தேர்வுகளின் கேள்வித்தாள் கள் கசிவது பெரும் பிரச்சனை களில் ஒன்றாகும். இதன் காரண மாக லட்சக்கணக்கான மாணவர் களும், அவர்களின் பெற்றோர் களும் கதறிக் கொண்டிருக்கிறார் கள். இப்போது வெளியாகியிருக் கின்ற தரவரிசைப் பட்டியலின் நம்ப கத்தன்மை கேள்விக்குறியாகி இருக்கிறது. மனிதகுலம் செம்மை யாக இருப்பதற்கு மருத்துவத் துறை மிகவும் முக்கியமானதாகும். எனவே இதன் தரம் பாதுகாக்கப்பட வேண்டும். ‘வியாபம் ஊழல்’ மற் றும் அதில் சம்பந்தப்பட்ட கயவர் களை நாம் மறந்துவிடக் கூடாது.
இந்த ஆண்டு பல்கலைக் கழக ‘நெட்’ தேர்வுகள் ரத்து செய்யப் பட்டிருக்கின்றன. இதனால் 9 லட்சத்து 8 ஆயிரத்து 580 மாண வர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார் கள். இந்த அரசாங்கம் தேர்வு முறையின் கூட்டாட்சிக் குணத்தை யே (federal character) அழித்து விட்டது. நாட்டின் பன்முகத்தன்மை யையே அவர்கள் ஒழித்துக்கட்ட முயற்சித்துக் கொண்டிருக்கிறார் கள். அதனால்தான் அவர்கள் ஒன் றாம் வகுப்பிலிருந்து, முதுகலைப் பட்டம் வரைக்கும் மற்றும் அனை த்து உயர்கல்வி நிறுவனங்களுக் கும் தேசிய தேர்வு முகமையை ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த அர சாங்கம் கல்வி நிறுவனங்களின் தேர்வு முறைகளையே சீரழித்து, ஊழல் பேர்வழிகளையும், தில்லு முல்லு செய்பவர்களையும் பாது காத்துக் கொண்டிருக்கிறது.
2021இல் ஜேஇஇ (JEE) தேர்வு வினாத்தாள்கள் வெளியானதால் 9,39,008 மாணவர்கள் பாதிக்கப் பட்டார்கள். 2021இல் யுஜிசி-நெட் (UGC-NET) தேர்வுத் தாள் வெளி யானதால் 12,67,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள். 2021இல் ‘நீட்’ தேர்வுத்தாள் வெளியான தால் 13,66,000 மாணவர்கள் பாதிக் கப்பட்டார்கள். 2022 நீட் தேர்வி லும் ஊழல்கள் நடந்துள்ளதன் கார ணமாக 17,64,571 மாணவர்கள் பாதிப் புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இந்த அமைப்பு முறையும் இதனை நடத்திடும் தேர்வு முகமை யும் ஊழல் மிகுந்தவை. எனவே இது மாற்றப்பட வேண்டும். ஒன் றிய அரசாங்கம் தேசிய தேர்வு முக மையை கலைத்துவிட வேண்டும். மாநில அரசாங்கங்களும், பல்க லைக் கழகங்களும் தேர்வுகள் நடத்த அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு டாக்டர் வி.சிவதாசன் பேசினார். (ந.நி.)