india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சவுக்கு சங்கரின் வீடு, அலுவலகத்தில் சோதனை!

சென்னை, மே 10 - காவல்துறை அதி காரிகள், பெண் காவ லர்கள் குறித்து அவ தூறாக பேசிய வழக் கில், சென்னையைச் சேர்ந்த சவுக்கு என்ற யூடியூப் சேனலின் முதன்மை செயல் அதி காரி சங்கரை கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கடந்த மே 4 அன்று தேனியில் கைது செய்தனர். 

தேனியில் அவரது காரில்  இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட் டது தொடர்பாகவும் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதியப்பட்டது. 

அந்த வகையில், கஞ்சா வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை மதுர வாயலில் உள்ள சவுக்கு சங்கரின் வீடு மற்றும் தி.நகர் அலுவலகத்தில் தேனி காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சவுக்கு சங்கருக்கு  கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு உள்ளதா? வீட்டில் கஞ்சா பொருட் களை பதுக்கி வைத்துள்ளாரா? என்ற அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக காவல்துறை வட்டா ரங்கள் தெரிவித்தன.

23 நாய் இனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை வாபஸ்!
சென்னை, மே 10 - தமிழ்நாடு அரசு 23 நாய் இனங்களு க்கு விதித்த தடையைத் திரும்பப் பெற்று ள்ளது. முறையாக வளர்க்கப்படாத ராட்வைலர் இன நாய்கள் 5 வயது சிறுமியைக் கடித்துக் குதறிய சம்பவ த்தைத் தொடர்ந்து, ராட்வைலர் உட்பட மொத்தம் 23 வகை யான நாய் இனங்கள் மற்றும் அவற்றின் கலப்பினங் களை இறக்குமதி  செய்யவும் விற்பனை செய்யவும் தமிழக அரசு தடைவிதித்தது. ஏற்கெனவே தடை செய்யப்பட்ட நாய் இனத்தை வைத்திருந்தால் அவற்று க்கு உடனடியாக கருத்தடை அறுவை சிகிச் சை செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தது. இந்நிலையில், அந்தத் தடையை, ஒரே நாளில் தமிழ்நாடு கால்நடை பரா மரிப்புத் துறை திடீரென திரும்பப் பெற்றுள்ளது. இதேபோல நாய் இனங் களுக்கு ஒன்றிய அரசு விதித்த தடையை எதிர்த்து, நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளதால், இந்த விஷயத்தில் உரிய ஆலோசனைகளுக்குப் பிறகு நடவடி க்கை எடுப்பதென தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

பொன்முடி ஜாமீன் பெற 2 வாரம் கூடுதல் அவகாசம்
உச்சநீதிமன்றம் வழங்கியது

புதுதில்லி,  மே 10 - சொத்துக் குவிப்பு  வழக்கில் அமைச்சர் பொன்முடி நீதி மன்றத்தை அணுகி ஜாமீனை பெற்றுக் கொள்ள கூடுதல் அவகாசம் வழங்கப் பட்டுள்ளது. 

சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 50 லட்சம் ரூபாய் அபராதமும் அறிவிக்கப்பட்டது. 3 ஆண்டு சிறை தண்ட னை விதிக்கப்பட்டதால் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை பொன்முடி இழந்தார்.ஆனால், மேல்முறையீட்டில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை, உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்ததால், பொன்முடி மீண்டும் எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியைப் பெற்றார்.

அதைத்தொடர்ந்து, தானும், தமது மனைவியும் ஜாமீன் பெறுவதற்கு வழங்கியிருந்த 30 நாள் அவகாசத்தை மேலும் நீட்டிக்க, பொன்முடி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்திருந் தார். இந்த முறையீட்டை ஏற்றுக் கொண்டுள்ள உச்சநீதிமன்றம், பொன் முடி ஜாமீன் பெறுவதற்கு, மேலும் 2 வாரம் அவகாசத்தை நீட்டித்துள்ளது.

அண்ணா பல்கலை.  தேர்வு தேதி மாற்றம்
சென்னை, மே 10 - தமிழ்நாடு முழுவதும் பொறியியல் மாணவர்களுக்கு செமஸ்டர் (பரு வத்) தேர்வுகள் மே 15 அன்று தொட ங்கி நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில், இந்த தேர்வுகள் தற்போது தள்ளி வைக்கப் பட்டு, ஜூன் 6 முதல் நடைபெறும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4 அன்று எண்ணப்பட இருக்கின்றன. தமிழகத்தின் 39 தொகு திகளில் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட மின்னணு இயந்திரங்கள் பெரும்பாலும் பொறியியல் கல்லூரிகளில் தான்  வைக்கப்பட்டுள்ளன. இந்த அறை களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பாதுகாக்கப் பட்ட இடங்களில் மாணவர்கள் அல் லது வெளியாட்கள் அனுமதிக்கப் படுவது கிடையாது. இந்த நிலையில் செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது என்பது கடினமாக இருக்கும் என்பதால் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. எனவே மே 15 அன்று பொறியியல் மாண வர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் இல்லை என்றும் அது ஜூன் 6 அன்று தொடங்கி நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.