india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தெற்கு அரபிக்கடலின் நடுவே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், கேரள மாநிலத்தில்  அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்புள் ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மகாராஷ்டிராவின் டிஜிபி ராஷ்மி சுக்லா ஆளும் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட்ட தாக எதிர்க்கட்சிகள்- எம்விஏ கூட்டணிக் கட்சிகள் புகார் அளித்தன. இதனால் ராஷ்மி சுக்லா டிஜிபி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து மகா ராஷ்டிராவின் புதிய டிஜிபியாக சஞ்சய் குமார் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

புல்வாய் இன (black buck) மானைக் கொன்ற தற்காக பாலிவுட் நடிகர் சல்மான் கான் எங்கள் கோவிலுக்குச் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ. 5 கோடி தொகை வழங்க வேண்டும் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் சல்மான் கானுக்கு புதிய மிரட்டல் விடுத்துள்ளது.