மக்களவைத் தேர்தல் பிரச்சா ரத்தில் கலந்து கொள்ள முடியாத படி “இந்தியா” கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு மத்திய அமைப்புகள் மூலம் மோடி அரசு நெருக்கடி அளித்து வருகிறது. ஏற்கெனவே “இந்தியா” கூட் டணியில் அங்கம் வகிக்கும் ஜேஎம்எம் கட்சித் தலைவரும், ஜார்க்கண்ட் முன் னாள் முதல்வருமான ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை சிறையில் அடைத் துள்ள நிலையில், தற்போது தில்லி முதல் வரும் ஆம் ஆத்மி தலைவருமான கெஜ்ரி வாலையும் சிறையில் அடைக்க அம லாக்கத்துறை 8-ஆவது முறையாக சம் மன் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் வலுவான வாக்கு வங்கி கொண்ட “இந் தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாதி கட்சித் தலைவரும், முன் னாள் முதல்வருமான அகிலேஷிற்கும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் வியா ழனன்று ஆஜராகுமாறு அகிலேஷிற்கு அனுப்பப்பட்ட சம்மனில் சிபிஐ குறிப் பிட்டுள்ளது.