புதுதில்லி, ஆக. 23 - வக்பு சட்டத் (திருத்த) மசோதா - 2024 குறித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் மாநில வக்பு வாரியங்களுடன் ஆலோ சனை நடத்துவதென நாடாளுமன்றக் கூட்டுக்குழு முடிவு செய்துள்ளது.
நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக கூட்டணி அரசு, சிறு பான்மை இஸ்லாமிய - கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான நடவடிக்கை களில் தொடர்ந்து ஈடுபட்டு வரு கிறது. நாடு முழுவதும் வக்பு வாரியங் களின் கட்டுப்பாட்டில் இருக்கும் 9 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான சொத்துக்களை சூறையாடும் வகை யில், வக்பு சட்டத் (திருத்த) மசோதா - 2024ஐ, கடந்த ஆகஸ்ட் 8 அன்று மக்க ளவையில், நாடாளுமன்ற விவகாரங் கள் மற்றும் சிறுபான்மையினர் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மூலம் தாக்கல் செய்தது.
எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
இதற்கு அறிமுக நிலையிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி கட்சி கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக்குழுத் தலை வர் கே. ராதாகிருஷ்ணன் பேசுகை யில், “நமது அரசியலமைப்பு சட்டம் உத்தரவாதம் அளிக்கும் மத வழிபாடு சுதந்திரத்தை இந்தச் சட்டத் திருத்தம் மீறிவிட்டது. நமது அரசியலமைப்பு சட்டத்தின் 25, 26, 27 மற்றும் 28 ஆகிய பிரிவுகளுக்கும் முரணாக சட்டத் திருத்தம் உள்ளது” என்று சாடினார்.
அத்துடன், “இந்தச் சட்டத் திருத்தம் மூலம் வக்பு வாரியம் நியமன அமைப் பாக மாறிவிடும். இந்த சட்டத்தின் ஒரே நோக்கம் வக்பு சொத்துக்களை அழிப்பது தான்!” என்றும் குற்றம் சாட்டிய ராதாகிருஷ்ணன், “இந்தச் சட்டத் திருத்தம் கொண்டு வரு வதற்கு முன்பு மாநில அரசாங்கங்க ளோடோ அல்லது முஸ்லீம் அமைப்பு களோடோ கலந்து ஆலோசிக்கப்பட வில்லை” என்பதைச் சுட்டிக்காட்டி, “எனவே, இந்தச் சட்டத் திரும்பப் பெறப்பட வேண்டும். அல்லது பரவலான கலந்தாலோசிப்புக்காக தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும்” என்றார்.
நாடாளுமன்றக் கூட்டுக்குழு ஆலோசனை
எதிர்க்கட்சிகளின் இந்த எதிர்ப்பையடுத்து, ஒன்றிய பாஜக அரசானது, 40 திருத்தங்களைக் கொண்ட வக்பு மசோதா-2024ஐ நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்புவதாக அறி வித்தது. பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் எதிர்க்கட்சிகளையும் உள்ள டக்கிய மக்களவையின் 21 உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவையின் 10 உறுப்பினர் கள் என 31 பேர்களைக் கொண்ட கூட்டுக்குழுவை யும் அமைத்தது.
இந்தக் குழுவின் முதல் கூட்டமானது, தில்லியில் வியாழனன்று நடைபெற்றது. இதில், தேஜஸ்வி சூர்யா மற்றும் அபராஜித் சாரங்கி (பாஜக)கவுரவ் கோகோய் (காங்கிரஸ்), ஆ. ராசா (திமுக) முகிபுல்லா (சமாஜ்வாதி), கல்யாண் பானர்ஜி (திரிணாமுல்), சஞ்சய் சிங் (ஆம் ஆத்மி), அசாதுதீன் ஓவைசி (மஜ்லிஸ் கட்சி) உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் விதிகள் உட்பட பல்வேறு திருத்தங் களுக்கு பாஜக உறுப்பினர்கள் பாராட்டு தெரி வித்தனர். மறுபுறத்தில், மாவட்ட ஆட்சியருக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது, வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவது உட்பட பல்வேறு பிரிவுகள் குறித்து, எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
அவர்களுக்கு, சிறுபான்மையினர் துறை மற்றும் சட்டத்துறை அதிகாரிகள் ஆஜராகி, வக்பு சட்டத் திருத்த மசோதாவின் முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கினர். இந்த மசோதா மூலம் சட்டத்தில் ஏற்படக்கூடிய மாறுதல்கள் குறித்து, சட்டத்துறை அதிகாரிகள் நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு விளக்கங்கள் அளித்தனர். அதேபோல சிறுபான்மையினர் நலத்துறை அதி காரிகள் இந்த திருத்தங்களின் தாக்கம் எத்தகைய விளைவுகளை இஸ்லாமிய அமைப்புகளுக்கு உருவாக்கும் என்பது குறித்தும் விளக்கினர்.
காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோச னைக் கூட்டம் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. உணவு இடை வேளைக்குப் பிறகு மீண்டும் துவங்கி மொத்தம் 6 மணி நேரம் வரை நடைபெற்றது.
அதன் முடிவில், பேட்டியளித்த குழு தலைவர் ஜெகதாம்பிகா பால், கூட்டம் பய னுள்ளதாக இருந்ததாகவும், வக்பு சட்ட (திருத்த) மசோதா - 2024’ குறித்து வக்பு வாரியங்கள் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புளை அழைத்து அவர்களது கருத்துக்களை கேட்கலாம் என கூட்டுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
விரிவான ஆலோசனைகளுக்கு பிறகு ஜெகதம்பிகா பால் தலைமையிலான நாடாளு மன்ற கூட்டுக்குழுவானது, வக்பு மசோதா தொடர்பான தனது பரிந்துரைகளை நாடாளு மன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யும் என கூறப்படுகிறது. கூட்டுக்குழுவின் அடுத்தக் கூட்டம் ஆகஸ்ட் 30 அன்று நடைபெறும் என்றும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.