மாநிலங்களவையில் எதிர்க் கட்சித் தலைவர் மல்லி கார்ஜுன கார்கேவை பேச விடாமல், மைக்கை அணைத்து அவமதிக் கப்பட்டது தொடர்பாக சமாஜ்வாதி எம்.பி., ஜெயா பச்சன், மாநி லங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஜெயா பச்சன் பேசும் போது குறுக்கிட்ட ஜகதீப் தன்கர்,”ஜெயா பச்சன் திரைப்பட நடிகையாக இருக்க லாம். ஆனால் அவையின் ஒழுங்கு முறைகளை அவர் புரிந்துகொள்ள வேண்டும். எப்படி கையாள வேண்டும் என்பது எனக்கு தெரியும். ஜெயா பச்சன் பெரும் புகழை பெற்றிருக்கிறார்; ஆனால் இயக்குநர் சொல்வது போல் தான் நடிக்க வேண்டும். எனது இருக்கை யில் இருந்து நான் பார்ப்பதை நீங்கள் பார்க்க முடியாது. தினமும் பள்ளியை போல நடத்திக்கொண்டு இருக்க முடி யாது” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். ஜகதீப் தன்கரின் இந்த பேச்சி ற்கு எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி னர்.
மன்னிப்பு கேட்க வேண்டும்
பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப் பில் பேசிய ஜெயா பச்சன் எம்.பி., “நாடாளுமன்றத்தில் ஜகதீப் தன்கர் வரம்பு மீறி பேசுகிறார். அவர் பயன் படுத்தும் வார்த்தைகளை பொது வெளியில் சொல்ல முடியாது. சில நேரங்களில் உங்களால் தொல்லையாக இருக்கிறது எனக் கூறுகிறார். உங்களு க்கு புத்தி குறைபாடு உள்ளது. நீங்கள் திரைப்பட பிரபலமாக இருக்கலாம்; அதுபற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை என என்னைப் பார்த்து ஜகதீப் தன்கர் கூறினார். நான் 5 முறை நாடாளு மன்ற உறுப்பினர். நான் என்ன சொல்கி றேன் என்பது எனக்குத் தெரியும். தற்போ தெல்லாம் நாடாளுமன்றத்தில் பேசப் படும் முறை முன்பு இல்லாதது. என்னைப் பற்றி ஆட்சேபனைக்கு உரிய விதத்தில் பேசியதற்காக ஜகதீப் தன்கர் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று கூறினார்.