india

img

மேற்கு வங்க அரசுக்கு சிக்கல் சடலங்களை விற்பனை செய்த ஆர்.ஜி.கே மருத்துவமனை முதல்வர்

மருத்துவ மாணவி வன்கொலை வழக்கில் ஆர்.ஜி.கே மருத்துவ மனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் சிபிஐ விசாரணை வளை யத்தில் உள்ள நிலையில், அவர் குறித்து நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், ஆர்.ஜி.கே மருத்துவ மனையில் உரிமை கோரப்படாத, அடை யாளம் காணப்படாத சடலங்களை உடல் உறுப்புகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பல்களுக்கு பெருந்தொகைக்கு விற்பனை செய்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

இதுதொடர்பாக ஆர்.ஜி.கே மருத் துவமனையின் முன்னாள் துணை கண்கா ணிப்பாளர் அக்தர் அலி கூறுகையில், “ஆர்.ஜி.கே மருத்துவமனையில் உரிமை கோரப்படாத அடையாளம் தெரியாத சடலங்களை விற்பனை செய்து வந்தார் சந்தீப் கோஷ். அத்துடன் மருத்துவக் கழிவுகளை வங்கதேசத்துக்கு கடத்தும் கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் சந்தீப் கோஷ். இது தொடர் பான விசாரணைக் குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன். இந்த விசாரணைக் குழுவில் சந்தீப் கோஷ் குற்றவாளி என ஆதாரங்களுடன் நிரூ பித்தோம். ஆனாலும் சந்தீப் கோஷ் மீது மேற்கு வங்க அரசு எந்த ஒரு நடவடிக்கை யுமே எடுக்கவில்லை. இந்த அறிக்கை யை சமர்ப்பித்த நாளிலேயே நான் ஆர்ஜிகே மருத்துவமனையில் இருந்து பணியிடம் மாற்றம் செய்யப்பட்டேன். எந்த ஒரு ஒப்பந்தமாக இருந்தாலும் சந்தீப் கோஷுக்கு 20% கமிஷன் கொடுக் கப்பட்டாக வேண்டும் என்பது எழுதப் படாத ஒன்றாக இருந்தது” என அவர் கூறினார்.

அக்தர் அலியின் இந்த குற்றச் சாட்டால் மேற்குவங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் ஏற் பட்டுள்ளது. சடலங்களை விற்ற சந்தீப் கோஷ்க்கு மேற்கு வங்க அரசு ஆதரவாக இருக்கிறது என்று அக்தர் அலி குற்றம் சாட்டியுள்ளார். ஒப்பந்தத்திற்கு 20% கமிஷன் என்ற குற்றச்சாட்டும் மிக முக்கியமானதாக உள்ள நிலையில், மருத்துவ மாணவி வன்கொலை, சட லங்கள் விற்பனை, 20% கமிஷன் போன்ற விவகாரங்கள் மம்தா அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளன.