india

காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி அளித்த “கோடி மீடியா”

மக்களவைத் தேர்தல் நெருங்கி யுள்ள நிலையில், 39 பேர் கொண்டமுதற்கட்ட வேட்பா ளர் பட்டியலை காங்கிரஸ்கட்சி வெள்ளியன்று மாலை வெளியிட்டது. ஆனால் 40 நிமிடங்களுக்கு முன்பே காங்கிணரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் கசிந்தது. அதாவது காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வேட்பாளர் பட்டிய லை 7 மணிக்கு மேல் அறிவித்த நிலை யில், அதற்கு முன்அதாவது 5:45 மணிக்கே “கோடி மீடியா”(பாஜக ஆதரவு) ஊட கங்களில் தலைப்புச் செய்தியாக காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட் பாளர் பட்டியல் வெளியானது. உத்தேச பட்டியலாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், 7 மணிக்கு மேல் கே.சி.வேணு கோபால் வெளியிட்டபட்டியலும் ஒரே மாதிரியாக இருந்தன.இந்தவிவகா ரம் “இந்தியா” கூட்டணியில் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

உளவுத்துறை மூலம் வேவு? “கோடி மீடியா” ஸ்லீப்பர் செல்
கடந்த வாரம் பாஜக சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டி யல் வெளியிடப்பட்டது. பத்திரிகையா ளர் சந்திப்புக்கு அழைக்கும் கடைசி நொடி வரை வேட்பாளர் பட்டியலின் எந்தப் பெயரும் வெளியே தெரிய வில்லை. ஆனால் காங்கிரஸ் வேட்பா ளர் மட்டும் பட்டியலை முன்கூட்டி “கோடி மீடியா” ஊடகங்களில் கசிந்தது எப்படி? எதிர்க்கட்சிகளை உளவுத்துறை மூலம் பாஜக வேவு பார்க்கிறதா? “கோடி மீடியா” ஊடகங்கள் சார்பில் பத்திரிகை யாளர்களை எதிர்க்கட்சி அலுவலகங்க ளில் பாஜக தயார் செய்து வைத்துள்ளதா? என்ற சந்தேகம் வலுவாக கிளம்பியுள்ளது.

நிதிஷ் ஓட்டம் - ஒரு எடுத்துக்காட்டு
பாஜகவின் மிரட்டலுக்கு அடிபணி ந்து கடந்த ஜனவரி மாத இறுதியில் “இந்தியா” மற்றும் “மகா” (பீகார் எதிர்க் கட்சிகளின் கூட்டணி) கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதள தலைவ ரும், பீகார் முன்னாள் முதல்வருமான நிதிஷ் குமார் ஓட்டம் பிடித்தார். நிதிஷ் பாஜக கூட்டணியில் இணையும் முன் னரே அதாவது ஒரு வாரத்திற்கு முன்பே நிதிஷ் பாஜக உடன் கைகோர்ப்பார் என “கோடி மீடியா” ஊடகங்கள் தொ டர்ச்சியாக செய்தியாக வெளியிட்டன. இதே போல மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான் பாஜக வில் இணைவு மற்றும் ஆட்சியை கலைக்கும் முனைப்பில் இமாச்சலப் பிரதேச 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய உள்ளது உள் ளிட்ட பல்வேறு விவகாரங்களை “கோடி மீடியா” ஊடகங்கள் துல்லியமாக செய்தியாக வெளியிட்டன. தற்பொழுது காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் மூலம் வலுவாக சந்தேகம் வலுத்துள்ளது.