india

img

விலைவாசி உயர்வு காரணமாக மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ .9000 ஆக மாற்றிடுக - பி.ஆர்.நடராஜன் கோரிக்கை

விலைவாசி உயர்வின் தாக்கம் காரணமாக, பஞ்சப்படியுடன் கூடிய மாதாந்திர ஓய்வூதியத்தை, குறைந்தபட்சம் ரூ.9000 ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களவையில், கடந்த 2-ஆம் தேதி கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தேசிய ஊரக வேலை திட்டத்தில் வழங்கப்படும் ஓய்வூதியம் குறித்து கேள்விக்கு எழுப்பினார். இதை அடுத்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் இதற்கு பதிலளித்தார். அதன்படி, கேரளாவில் அதிகபட்சமாக ரூ. தேசிய ஊரக வேலை திட்டத்தின் வழங்கப்படுவது தெரியவந்துள்ளது.  அதன்படி, அதிகபட்ச ஓய்வூதியமாக நாள் ஒன்றுக்கு அரியானாவில் 284 ரூபாயும், கேரளத்தில் 271 ரூபாயும், கர்நாடகத்தில் 241, ரூபாயும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 229 ரூபாய் வழங்கப்படுவதாகவும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக நாள் ஒன்றுக்கு ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலத்தில் நாள் 171 ரூபாய் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். 

இந்நிலையில், விலைவாசி உயர்வின் தாக்கம் காரணமாக, பஞ்சப்படியுடன் கூடிய மாதாந்திர ஓய்வூதியத்தை, குறைந்தபட்சம் ரூ.9000 ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று பி.ஆர்.நடராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறுவதாவது:
”இபிஎஸ் 1995 திட்டத்தின் கீழ் 64 லட்சம் பேர் ஓய்வூதியத்தைப் பெறுகிறார்கள் என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். அவர்கள் அனைவரும் மூத்த குடிமக்கள், அவர்கள் வாழ்வாதாரத்திற்காக இந்த அற்ப தொகையை சார்ந்து உள்ளனர். ஓய்வூதியதாரர்களில் 25% பேர் மாதத்திற்கு ரூ .1000க்கும் குறைவாகவும் மற்ற 75% பேர் மாதாந்திர ஓய்வூதியம் ரூ .1000 மற்றும் அதற்கு மேலும் பெறுகிறார்கள். நாட்டில் நிலவும் பணவீக்க நிலைமை குறித்து அரசாங்கம் அறிந்திருப்பதால், குடும்பத்தின் குறைந்தபட்ச தேவைகளை பூர்த்தி செய்ய இந்த அற்ப தொகை போதுமானதாக இல்லை. இது 64 லட்சம் ஓய்வூதியதாரர்களின் வாழ்வாதார பிரச்சினை என்பதால், நாம் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் கணக்கில் சேர்த்தால், இந்த எண்ணிக்கை சுமார் 2.5 கோடி மக்களாக ஆகிறது. இந்த சிக்கல்களைக் அவசரமாக கவனிக்க வேண்டிய தேவை உள்ளது. பாராளுமன்றக் குழுவை அமல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் .இந்தக் குழு ரூ .3000 இடைக்கால நிவாரணத்தை மாத ஓய்வூதியமாக பரிந்துரைத்தது. ஆனால், அது அரசாங்கத்தால் இறுதி செய்யப்படவில்லை.

நான் அரசாங்கத்திடம் வற்புறுத்திக் கேட்டுக்கொள்ள விரும்புவது, விலைவாசி உயர்வின் தாக்கத்தின் காரணமாக, நியாயமானதாக கருதப்படும் கோரிக்கையான, பஞ்சப்படியுடன் கூடிய, ரூபாய் 9000த்தை குறைந்தபட்ச ஓய்வூதியமாக நிர்ணயிப்பதை, பரிசீலனையில் கொள்ள வேண்டும். எனவே, பின்வரும் கோரிக்கைகளை அவசரமாக நிறைவேற்றுமாறு வற்புறுத்தி  கேட்டுக்கொள்கிறேன். இபிஎஸ்-95 இன், கீழ் பஞ்சப்படியுடன் கூடிய மாதாந்திர ஓய்வூதியம் , ரூ .9000 ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும். 2013 ஆம் ஆண்டு, நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரையின் படி, இடைக்கால நிவாரணம் ரூ.3000 மாத ஓய்வூதியமாக தரப்பட வேண்டும். பிப்ரவரி 2015 இல் CBT யின் பரிந்துரையின் படி, தங்களின் 1/3 பங்கு பணத்தை கம்யூட் (Commute) செய்து, அதை 100 மாத தவணையில் திருப்பி செலுத்தியவர்களுக்கு முழு ஓய்வூதியத் தொகை திரும்பக் கிடைக்க வேண்டும். முந்தைய அரசாங்கத்தால் 2018 ஆம் ஆண்டில் ஒருதலைப்பட்சமாக திரும்பப் பெறப்பட்ட சலுகைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும்.” என கோரியுள்ளார்.


 

;