india

img

வீட்டிற்கு வெளியே பஜ்ரங் புனியா

பாலியல் புகாருக்குள்ளான பாஜக எம்பியும், முன்னாள் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவ ருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின்  ஆதரவாளரும், தொழில் கூட்டாளி யான சஞ்சய் சிங் புதிய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வு  செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரி வித்து மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா வும் மல்யுத்த விளையாட்டிலிருந்து விலகுவதாக அறிவித்து, வியாழ னன்று மாலை 5 மணி அளவில் பிர தமர் மோடியைச் சந்தித்து பத்மஸ்ரீ  பதக்கம் மற்றும் கடிதத்தை வழங்கு வதற்காக நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் இல்லத்திற்குச் சென்றார்.

ஆனால் புனியாவை கர்தவ்யா பாதையில் (ராஜ்பாத்) போலீசார் தடுத்து நிறுத்தினர். பத்மஸ்ரீ விருது பதக்கத்தை கையில் வைத்தபடி சிறிதுநேரம் அங்கே சோகமாக அமர்ந்து இருந்த பஜ்ரங் புனியா,  பதக்கத்தை அங்கேயே வைத்து விட்டு சென்றார். இந்த விவகாரம் நாட்டையே கொந்தளிக்க வைத்து  ளது. இந்நிலையில், பிரதமர் மோடி பஜ்ரங் புனியா தன்னை சந்திக்க வந்த நேரத்தில் பாஜகவின் வளர்ச்சி தொடர்பாக பங்கேற்க நைசாக நழுவியுள்ளார். 

பெண்கள், குழந்தைகளை பாதுகாக்க பாஜக “பேட்டி பச்சாவோ  பேட்டி பதாவோ” என்ற பெயரில் நாடுமுழுவதும் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், நாட்டிற்காக பதக்கம் வென்ற சாக்சி மாலிக் கண்ணீருடன் மல்யுத்தத்தில் இருந்து விடைபெற்ற பொழுது பிர தமர் மோடி அதை பற்றி வாய் திறக்காமல் உள்ளார்.