நாடாளுமன்ற தேர்தலுடன் அனைத்து மாநில சட்டமன்றம், யூனியன் பிரதேசத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வழிவகை செய்யும் அரசமைப்புச் சட்ட (129-ஆவது திருத்தம்) மசோதா 2024 மற்றும் யூனியன் பிரதேசம் சட்ட (திருத்தம்) மசோதா 2024 ஆகியவற்றை மக்களவையில் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் மேக்வால் செவ்வாய்க்கிழமை (டிச., 17) காலை தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் வாக்கெடுப்பு மூலம் “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளது. மக்களவையில் மசோதா தாக்கல் செய்த பின் நடைபெற்ற விவாதத்தின் பொழுது எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் ஆற்றிய உரை:
“ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா “ஒரு தலைவர் ஒரு நாடு” கருத்தின் மற்றொரு அம்சம் ஆகும். அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதி ரான இந்த மசோதா மூலம் நாட்டின் கூட்டாட்சித் தன்மையை உடைக்கும் நட வடிக்கையை ஒன்றிய அரசு மேற் கொண்டு வருகிறது. தைரியம் இருந்தால் தாங்கள் அரசியல் சாசனத்துக்கு எதி ரானவர்கள் என்பதை ஒன்றிய அரசு வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும்.
சிபிஎம் எம்.பி., ஜான் பிரிட்டாஸ்
“ஒரே நாடு ஒரே தேர்தல்” சட்ட மசோ தாக்கள் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு மீதும், ஜனநாயகத்தின் மீதும் தொடுக்கப்படும் தாக்குதல். மக்களவையின் பதவிக்காலத் திற்கு ஏற்றவாறு மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலத்தை மாற்றியமைக்க முடி யாது. இந்த மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
காங்கிரஸ் எம்.பி., மணீஷ் திவாரி
‘ஒன்று’ என்ற வார்த்தையே ஜன நாயகத்துக்கு எதிரானது தான். ‘ஒன்று’ மட்டும் இருக்கும் இடத் தில் வேறொன்று இடம்பெற முடியாது. ‘ஒன்று’ என நினைத்துக் கொள்வது அதி காரத்தை சர்வாதிகாரமாக மாற்றும். நாடா ளுமன்றத்தில் “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதாவை தாக்கல் செய்தது மிக மோசமானது.
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்
“ஒரே நாடு ஒரே தேர்தல்” முறை யால் செலவினம் குறையும் என்ற வாதத்தை ஏற்க முடி யாது. மாநில சுயாட்சி, கூட்டாட்சி தத்து வத்துக்கு எதிராக கொண்டு வரப்பட்ட “ஒரே நாடு ஒரே” தேர்தல் மசோதா மாநில உரிமைகளுக்கு எதிரானது. இது அதிபர் ஆட்சிக்கே வழிவகுக்கும். மாநிலகட்சிகளை வலுவிழக்கச் செய்யும்.இம்மசோதாவை திமுக தொடர்ந்து எதிர்க்கும். முக்கிய பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவ னத்தை திசை திருப்பக் கூட இந்த மசோ தாவை கொண்டு வந்திருக்கலாம்.
திமுக நாடாளுமன்ற தலைவர் கனிமொழி
“ஒரே நாடு, ஒரே தேர்தல்” மசோதா கூட்டாட்சி மற்றும் அரசியலமைப்பை சிதைத்து, அதிகாரத்தை மையப் படுத்துவதற்கான முயற்சிஆகும். மசோதா வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் அல்லது மசோதாவை கூடுதல் ஆலோசனைக் காக நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்.
தேசியவாத காங்கிரஸ் (சரத்) எம்.பி., சுப்ரியா சுலே
“ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டம் என்பது தேர்தல் சீர்திருத்தத்துக்கான திட்டம் அல்ல, ஒற்றை மனிதனின் ஆசைக ளையும், கனவுகளையும் நிறைவேற்றிக் கொள்வ தற்கான திட்டம். இந்த மசோதா ஏற்கப்பட்டால், தேர்தல் ஆணையம்தான் இந்தியாவின் எல்லா வற்றையும் தீர்மானிக்கும். “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா தேர்தல் ஆணையத்துக்கு கட்டற்ற அதிகாரத்தை அளிக்கிறது. மசோதாவை ஒருபோதும் அமல்படுத்த விட மாட்டோம். அழிவு நாள் வரை இந்தியாவில் ஒரே கட்சியால் ஆட்சி அமைக்க முடியாது.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., கல்யாண் பானர்ஜி
“ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா நல்ல தல்ல. அரசியல் ஆதாயத்திற்காக மாநில சட்டமன்றத் திறனை சமரசம் செய்ய முடியாது. தேர்தல் நடத்தை விதிகளை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையத்தின் திறனைக் கூட சரிபார்க்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா ஆபத்தானது.
சிவசேனா (உத்தவ்) எம்.பி., அனில் தேசாய்
ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது. இந்த மசோதா கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்பதே திமுகவின் நிலைப்பாடு; நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு மசோதாவை அனுப்ப வேண்டும்.
திமுக மக்களவை தலைவர் டி.ஆர்.பாலு
“ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதாஅரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புக்கே எதிரானது. இந்த மசோதா மூலம் இந்தியாவின் பன்முகத்தன்மையை சீர்குலைக்க சதி நடக்கிறது. “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதாவை சட்டமாக விட மாட்டோம்.
சமாஜ்வாதி எம்.பி., தர்மேந்திரா
X“ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. மக்கள் பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்பும் தந்திரமே இந்த மசோதா தாக்கல் ஆகும். வேலை வாய்ப்பு, உணவு பாதுகாப்பு மற்றும் விவ சாயிகள் நலன் போன்ற பிரச்சனைக ளை விட “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதாவின் மீது ஒன்றிய அரசு அதிக கவனம் செலுத்துவது ஆபத்தானது.
சிரோமணி அகாலி தளம் எம்.பி., ஹர்சிம்ரத் கவுர் பாதல்
“ஒரே நாடு ஒரே தேர்தல்” நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கு எதி ரானது. கடந்த 11 ஆண்டுக ளாக பாஜக அரசு எந்த நோக்கத்துடன் செயல்படுகிறது? என்றே புரியவில்லை. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒன்றிய அரசு எதையும் செய்யவில்லை. மக்களின் கோரிக்கை கள் குறித்து எதுவும் செய்யாமல், புதிய மசோதாக்களை மட்டுமே கொண்டு வருகிறார்கள்.
ஆம் ஆத்மி எம்.பி., குர்மீத் சிங்
“ஒரே நாடு ஒரே தேர்தல்” தொடர் பாக இன்னும் நாங்கள் முடிவெடுக்கவில்லை. மசோ தா நகல் வெளியான பிறகு அதை ஆய்வு செய்து கட்சியால் முடிவு எடுப்போம். மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யும் பொழுது உறுதியான தங்களது நிலைப்பாட்டை அறிவிப்போம்.
பிஜு ஜனதா தளம் எம்.பி., சஸ்மித் பத்ரா