மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி-க்கள் வலியுறுத்திய நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் மழைக்கால கூட்ட தொடர், கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 7வது நாளான இன்றும், மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி-க்கள் வலியுறுத்தினர். மக்களவையில் முழக்கங்களும் எதிர்க்கட்சியினர் எழுப்பினர். இந்த நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இரு அவைகளும், ஜூலை 31-ஆம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.