திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவர் (31) பாலியல் வன்கொலை செய்யப் பட்டார். இந்த படுகொலையை கண்டித்தும், உண்மையான குற்றவாளியை கைது செய்யக் கோரியும், மருத்துவக் கல்லூ ரிகளில் பாதுகாப்பை பலப் படுத்தக் கோரியும், உயிரிழந்த மாணவிக்கு நீதி வழங்கக் கோரியும் இரண்டாம் கட்டமாக சனியன்று நாடு முழுவதும் மருத்துவ மாண வர்கள், மருத்துவர்கள் இந்திய மருத்துவ சங்கத்தின் தலைமை யில் 5 முக்கிய அம்ச கோரிக்கைக ளுடன் போராட்டம் நடத்தினர்.
முடங்கிய மருத்துவ சேவை
இந்திய மருத்துவ சங்கம் அறிவித்தது போல அத்தியாவசிய மான மருத்துவ சேவைகள் மற்றும் அவசர சிகிச்சைகள் தவிர மற்ற மருத்துவ சிகிச்சைகள் சனிக் கிழமை காலை 6 மணி முதல் ஞாயிறு காலை 6 மணி வரை மேற் கொள்ளப்படவில்லை. இதனால் நாட்டின் பல பகுதிகளிலும் மருத்துவ சேவைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மேற்கு வங்கம், புதுதில்லி, ஹரி யானா, மகாராஷ்டிரா, கேரளா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநி லங்களில் 70% அளவில் மருத்துவ சேவை முடங்கியது.
பிரதமர் தலையிட வேண்டும்
கொல்கத்தா மருத்துவ மாணவி வன்கொலை விவகாரம் தொடர் பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் (ஐஎம்ஏ) தேசியத் தலைவர் டாக்டர் ஆர்.வி.அசோகன் செய்தி யாளர்கள் சந்திப்பில்,”பிரதமர் மோடி ஆகஸ்ட் 15 அன்று தனது சுதந்திர தின உரையில் பெண்கள் பாதுகாப்பு பற்றி தனது கவ லையை வெளிப்படுத்தினார். தனது கூற்றைப் போலவே கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டு கொல் லப்பட்ட வழக்கில் பிரதமர் மோடி தலையிட வேண்டும். பிரதமர் தலை யிடுவதற்கான நேரம் வந்து விட்டது. இது தொடர்பாக நாங்கள் பிரதமருக்கு கடிதம் எழுது வோம். அவரது தலையீட்டைக் கோருவோம். இந்திய மருத்து வர்கள் சங்க பிரதிநிதிகள் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்து ஆலோ சனை நடத்தினோம். இனி அரசு தான் பதில் சொல்ல வேண்டும். நாங்கள் கேட்பது ஒன்றிய அரசால் முடியாத ஒன்றல்ல. மருத்துவர்களின் போராட் டத்துக்குநாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் பெரும் வர வேற்பு உள்ளது. இந்த அநீதி க்கு எதிராக மருத்துவர்கள் ஒற்று மையாக நிற்கிறார்கள். நாங்கள் அவசர சேவைகளை கவனித்து வருகிறோம். அனைத்து துறை களைச் சேர்ந்தவர்களும் மருத்துவர்களுக்காக நிற்கி றார்கள். பெண்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனை என்பதால் இது சர்வதேச கவனத்தைப் பெற வேண்டும்” என தெரிவித்தார்.
இந்திய மருத்துவ சங்கத்தின் 5 முக்கிய கோரிக்கைகள்
1. சுகாதார பணியாளர்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க நாடுதழுவிய அளவில் ஒரு சட்டம் இயற்ற வேண்டும். 25 மாநிலங்க
ளில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீதான தாக்குதலுக்கு எதிராக சட்டங்கள் உள்ளன. ஆனால் இதுவரை தண்டனைகள் வழங்கப்படவில்லை. இந்தச் சட்டங்கள் களத்தில் பெரும்பாலும்பயனற்றவையாகவே இருக்கின்றன. அவற்றால் குற்றங்களைத் தடுக்க இயலவில்லை. சுகாதார சேவை பணியாளர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் (வன்முறை தடுப்பு மற்றும் சொத்துகள் சேதம்) மசோதா 2019 மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
2. உறைவிட மருத்துவர்களின் பணி மற்றும் வாழ்விடச் சூழல்கள் மேம்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக 36 மணி நேர பணி என்பதில் மாற்றம் தேவை.
3. கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும். ஆர்.ஜி.கர் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டறிந்து உரிய தண்டனை வழங்க வேண்டும்.
4. விமான நிலையங்கள் போல குறைந்தபட்சம் பெரிய மருத்துவமனைகள் மட்டுமாவது பாதுகாப்பு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அவை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கவேண்டும்.
5. குற்றத்தின் தன்மைக்கேற்ப கொல்கத்தாவில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு கண்ணியமான இழப்பீடு தொகை வழங்க வேண்டும்என 5 கோரிக்கைகளை முன்வைத்து மருத்துவர்கள் நாடு தழுவியபோராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தான், நேபாளம் மருத்துவ சங்கங்களும் ஆதரவு
மருத்துவர்களின் போராட்டத்திற்கு பாகிஸ்தான், நேபாளம் நாடுகளின் மருத்துவ சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக பாகிஸ் தான் மருத்துவ சங்கம்,“இந்தியாவில் மருத் துவர்கள் போராடுவது கவலை அளிப்ப தாக உள்ளது. அதனால் இந்த விவகாரத் தில் தலையிட உலக மருத்துவ சங்கத்திற்கு கடிதம் எழுத உள்ளோம்” என கூறியுள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது.