india

img

லாபம் காணாத புதிய நிறுவனங்களிடமும் பணத்தைப் பறித்த பாஜக

அமலாக்கத்துறை உள்  ளிட்ட மத்திய அமைப்பு களை வைத்து மிரட்டி  தேர்தல் பத்திரம் மூலம் ரூ. 6,000 கோடிக்கும் அதிகமான  தொகையை வாரி சுருட்டியுள் ளது பிரதமர் மோடியின் பாஜக.  தேர்தல் பத்திரங்கள் தொடர் பான ஊழல் விஷயங்களில் வெறும் 60% தகவல்கள் மட்டுமே இதுவரை வெளிவந் துள்ள நிலையில், இன்னும் 40% க்கும் அதிகமான அளவி லான ஊழல் தகவல்களை எஸ்பிஐ வங்கி மற்றும் தேர்தல்  ஆணையத்தின் மூலம் மோடி  அரசு மூடி மறைத்து வருகிறது. எனினும் புலனாய்வு பத்தி ரிகை நிறுவனங்களின் ஆய்வு கள் மூலம் பாஜகவின் தேர்தல்  பத்திரங்கள் தொடர்பான மற்ற ஊழல்கள் ஒவ்வொன்றாக கசிந்து வருகின்றன. 

இந்நிலையில், விதிகளை மீறி புதிய நிறுவனங்களிடம் கூட தேர்தல் பத்திரங்கள் மூலம் கோடிக்கணக்கில் பணம் பெறப்பட்டுள்ளது என மேலும் ஓரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 3 ஆண்டுகள் கூட பூர்த்தி யடையாத புதிய நிறுவனங் கள் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கக்கூடாது என்ற விதி  உள்ள நிலையில், 20 புதிய நிறு வனங்கள் ரூ.103 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளன. இதில் 90%  அளவிலான தொகை பாஜக விற்கே அளிக்கப்பட்டுள்ள தாக வழக்கமான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

அதானிக்குச் சொந்தமானதா?
புதிய நிறுவனங்களாக கூறப்படும் 20 நிறுவனங்கள் பெரியளவு லாபம் காணாத நிறுவனங்கள் ஆகும். லாபம் காணாத நிறுவனங்கள் எவ் வாறு கோடிக் கணக்கில் நன் கொடை அளிக்க முடியும்? ஒருவேளை பாஜகவிற்கு நன்கொடை அளிப்பதற்காக புதிய நிறுவனங்கள் உரு வாக்கப்பட்டதா? இல்லை மோடிக்கு மிக நெருங்கிய நண்பரான அதானி நந் கொடை கொடுப்பதற்காக புதிய நிறுவனங்களை உரு வாக்கினாரா? என பல்வேறு  சந்தேகங்கள் கிளம்பியுள் ளன.

தலித் விவசாயியிடம் தேர்தல் பத்திரம் மூலம் ரூ.11.14 கோடியை பறித்த பாஜக

அதானி நிறுவனம் மீதும் புகார்
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தலித்  ஏழை விவசாயி ஒருவரையும் ஏமா ற்றி பாஜக ரூ.11.14 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக பறித்துள்ளது. கட்ச் மாவட்டத்தில் வசிக்  கும் தலித் விவசாயி மன்வர் என்பவ ருக்குச் சொந்தமான நிலத்தை கடந்த 2023இல் அதானி நிறுவனம் வாங்கி உள்  ளது. அதற்கான ரூ.11.14 கோடி பணத்தை  கொடுக்காத அந்நிறுவனம் இவ்வளவு பெரிய தொகை வங்கி கணக்கில் டெபா சிட் செய்தால் வருமான வரித்துறை சோத னைக்கு ஆளாக நேரிடும் என்றும், இந்த  தொகைக்கு தேர்தல் பத்திரங்களை வாங்  கினால், சில ஆண்டுகளில் தொகையின் மதிப்பு கூடும் என அதானி நிறுவன மேலா ளர் மஹிந்திர சிங்க் சோதா என்பவர் கூறி யுள்ளார். இதனை நம்பி தேர்தல் பத்தி ரங்களை வாங்க மன்வர் குடும்பம் ஒப்புக்  கொண்டுள்ளது. அதன்படி 2023 அக்டோ பர் மாதம் வாங்கப்பட்ட அந்த தேர்தல் பத்திரங்களை பாஜக பணமாக்கி இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தலித் விவசாய குடும்பத்தினர் அதானி நிறுவனத்தின் 4 இயக்குனர்கள், மேலா ளர் மகேந்திர சிங், பாஜக பிரமுகர் ஹேமந்த்  உள்ளிட்டோர் மீது கடந்த மார்ச் 18 அன்று  குஜராத் போலீசில் புகார் அளித்தனர். இது பாஜகவின் தேர்தல் பத்திர நன் கொடை விவகாரம் என்பதால் போலீசார் வழக்குப்பதிவு கூட செய்யவில்லை என  தகவல் வெளியாகியுள்ளது.

கார்ப்பரேட் உள்ளிட்ட பெரும் நிறு வனங்களை மத்திய அமைப்புகள் மூலம்  மிரட்டி பாஜக தேர்தல் பத்திரங்கள் மூலம்  பணம் பறித்தது மட்டுமே இதுவரை வெளியே கசிந்த நிலையில், தற்போது சாதாரண ஏழை விவசாயிகளை கூட விட்டு வைக்காமல் அதானி நிறுவனம் மூலம் ரூ.11 கோடி தொகையை தேர்தல்  பத்திரம் பாஜக  பறித்துள்ளது நாடு முழு வதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது.