india

img

நாடாளுமன்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!

92 எம்.பி-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறல் குறித்து உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வலியுறுத்தி, கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட 14 எம்.பி-க்கள் (மக்களவையில் - 13 எம்.பி-க்களும், மாநிலங்களவையில் - 1 எம்.பி) இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, கடந்த 18-ஆம் தேதி மக்களவையில் 33 எம்.பி-க்கள்,  மாநிலங்களவையில் 45 எம்.பி-க்கள் என மொத்தம் 78 எதிர்க்கட்சி எம்.பி-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், அத்துமீறி மக்களவைக்குள் நுழைந்த 2 பேருக்கு அனுமதி சீட்டு வழங்க பரிந்துரை செய்த பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவை கைது செய்யக் கோரியும், பாதுகாப்பு குறைபாடு குறித்து பதிலளிக்க மறுத்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தியும், நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி எழுப்பிய 92 எம்.பி-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.