india

img

மோடி அரசின் ஊழலை அம்பலப்படுத்திய 3 சி.ஏ.ஜி அதிகாரிகள் பணி இடமாற்றம்!

துவாரகா விரைவுச்சாலை திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஆகியவற்றில் நடைபெற்ற ஊழலை அம்பலப்படுத்திய இந்திய தணிக்கை மற்றும் கணக்கு சேவை (IA&AS) அதிகாரிகள் 3 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
ஒன்றிய பாஜக அரசின் பாரத்மாலா திட்டம், துவாரகா விரைவு பாதை கட்டுமான திட்டம், சுங்க சாவடி கட்டணங்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டம், அயோத்தியா மேம்பாட்டு திட்டம், கிராமப்புற அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்டம், எச்.ஏ.எல். விமான வடிவமைப்புத் திட்டம் என இந்த 7 திட்டங்களிலும் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்று சி.ஏ.ஜி அறிக்கையின் மூலம் தெரியவந்தது. இந்த நிலையில், துவாரகா விரைவுச்சாலை திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஆகியவற்றில் நடைபெற்ற ஊழலை அம்பலப்படுத்திய இந்திய தணிக்கை மற்றும் கணக்கு சேவை (IA&AS) அதிகாரிகள் 3 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
ஒன்றிய அரசின் நலத் திட்டங்களில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்திய 12 சி.ஏ.ஜி அறிக்கைகள், கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 12-ஆம் தேதி 3 அதிகாரிகளும் பணி இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.