india

img

கோவையில் மீண்டும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

கோவை, ஜூன் 20 - கோவையில் மீண்டும் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி, விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கோவையைச் சேர்ந்த முகமது அசாருதீன், ஷேக் இதாயத்துல்லா, இப்ராகிம் என்ற ஷாஹின்ஷா, அக்ரம் சிந்தா, சதாம் உசேன், அபுபக்கர் ஆகியோரின் வீடு களிலும் ஒரு அலுவலகத்தி லும் தேசிய புலனாய்வு நிறு வன அதிகாரிகள் ஏற்கனவே சோதனை நடத்தினர். தமிழகம், கேரளத்தில் தீவிரவாத தாக்குதல்களை நடத்தும் நோக்குடன் சமூக வலைத்தளங்களில் ஐ.எஸ். தீவிரவாத இயக்க கருத்துகளை பரப்பியதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தப்பட்டதாக என்.ஐ.ஏ. தரப்பில் தெரி விக்கப்பட்டது. சோதனையைத் தொட ர்ந்து முகமது அசாருதீன், ஷேக் இதாயத்துல்லா ஆகி யோரை கைது செய்தனர். அவர்களை கேரள மாநிலம் கொச்சிக்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் 5 நாள் என்.ஐ.ஏ. காவலில் விசாரிக்க கொச்சி நீதி மன்றம் அனுமதி அளித்தது

இந்நிலையில் முகமது அசாருதீனை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவைக்கு அழைத்து வந்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் கோவை குனியமுத்தூரில் உள்ள சினோஜ் என்பவரின் வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையில் சினோஜ் வீட்டில் இருந்து ஒரு கணினி, ஒரு மடிக்கணினி, 2 ஹார்டு  டிஸ்குகள், 4 பென் டிரை வ்கள், சில ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப் பட்டன.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வர்கள், சினோஜின் கம்ப்யூட் டர் சர்வீஸ் சென்டரில் சேவைகளைப் பெற்றதாக வும், அசாருதீன் தனது கணினி ஹார்ட் டிஸ்கு கள் உள்ளிட்டவை சினோஜி டம் இருப்பதாக தெரிவித்த தாகவும் கூறப்படுகிறது.  இந்த அடிப்படை யிலேயே, சினோஜின் வீட்டில் சோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. சினோஜின் வீட்டைத் தொடர்ந்து கோவையில் வேறு சில இடங்களிலும் என்.ஐ.ஏ. அதி காரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரி விக்கின்றன.

;