india

img

ஆர்டிஐ மூலம் தகவல்களை வெளியிட ரயில்வே புதிய கட்டுப்பாடு!

ஆர்டிஐ மூலம் தகவல்களை வெளியிட ரயில்வே புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.

நாட்டிலுள்ள ரயில் நிலையங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்துடன் செல்பி எடுத்துக் கொள்வதற்கான தற்காலிகமான செல்ஃபி மையங்கள் (selfie booths) அமைக்க தலா ரூ1.25 லட்சம், நிரந்தர செல்ஃபி மையங்கள் அமைக்க தலா ரூ.6.25 லட்சம் செலவானது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்தது.

இந்த தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த தகவலை வெளியிட்ட மத்திய ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியான சிவ்ராஜ் மன்ஸ்புரே பணியிட மாற்றமும் செய்யப்பட்டார்.

இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் தகவல்களை வெளியிட ரயில்வே நிர்வாகம் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.

அதன்படி, ஆர்டிஐ-இன் கீழ் இனி வழங்கப்படும் அனைத்து பதில்களுக்கும், மண்டல ரயில்வேயின் பொது மேலாளர்கள் அல்லது கோட்ட ரயில்வே மேலாளர்களால் அனுமதிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.