india

img

9 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்

6 மாநிலங்களுக்கு புதிய ஆளு நர்களை நியமித்தும், மூன்று மாநில ஆளுநர்களை மாற்றி யும் குடியரசுத் தலைவர் திரெள பதி முர்மு ஞாயிறன்று உத்தர விட்டுள்ளார். இதுதொடர்பாக குடி யரசுத் தலைவர் மாளிகை வெளி யிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ”ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த  சி.பி ராதாகிருஷ்ணன் மகாராஷ்டி ரா மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதே போல புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கே. கைலாசநாதனும், பஞ்சாப் புதிய ஆளுநராக குலாம் சந்த் கட்டாரியாவும், ராஜஸ்தான் ஆளு நராக ஹரிபாவ் கிசன்ராவ் பாக்டே வும், தெலுங்கானா ஆளுநராக ஜிஷ்ணு தேவ் வர்மாவும், சிக்கிம் ஆளுநராக ஓம் பிரகாஷும், ஜார்க் கண்ட் ஆளுநராக சந்தோஷ் குமார் கங்வாரும், சத்தீஸ்கர் ஆளுநராக ராமன் தேகாவும், மேகாலயா ஆளு நராக சி.எச். விஜயசங்கரும் நிய மிக்கப்பட்டுள்ளனர். அசாம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள லஷ்மண் பிரசாத் ஆச்சார்யா மணிப் பூர் ஆளுநராக பணியாற்ற கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

மோடிக்கு நெருக்கமானவர்...

புதுச்சேரி துணைநிலை ஆளுந ராக நியமிக்கப்பட்டுள்ள கே. கைலாசநாதன் கேரளத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான (1979 பேட்ஜ்) பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். குஜராத் தில்  முதல்வராக மோடி இருந்த போது, 2013-14 காலகட்டத்தில் மோடியின் முதன்மைச் செயலாளராக பணி யாற்றியவர் கே. கைலாசநாதன் புதுச் சேரி துணைநிலை ஆளுநராக நிய மிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பி டத்தக்கது.