india

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்த புதிய குழு!

புதுதில்லி ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பாக, ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு அளித்த அறிக்கையை, ஒன்றிய அமைச்சரவை ஏற்றுக் கொண்டுள்ளதாக ஒன்றிய ரயில்வே மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் புதனன்று நடை பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் இந்த தகவலை அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர், மேலும் கூறுகையில், “நாடாளுமன்ற மக்களவைக்கும், மாநில சட்டமன் றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படு வதற்கு பரவலாக ஆதரவு உள்ளது. இதில், முதற் கட்டமாக மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்க ளுக்கான தேர்தலையும், 2-ஆம் கட்டமாக உள் ளாட்சித் தேர்தலையும் நடத்த முயற்சிப்போம். இந்த முடிவை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஒருமனதாக எடுத்துள்ளது. எனவே, இதனை நடைமுறைப்படுத்தும் குழுவையும் நாங்கள் அமைப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.