நடப்பு ஆண்டு நீட் தேர்வில் வினாத் தாள் கசிவு, கருணை மதிப்பெண் கள் போன்றவை மூலம், பெரியள வில் முறைகேடு அரங்கேறியது வெளிச் சத்திற்கு வந்துள்ளது. இந்த நீட் முறை கேடு விவகாரத்தை சிபிஐ விசாரித்து வரு கிறது. இந்நிலையில், உச்சநீதிமன்றத் தின் கண்டனத்தால் 1,563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாகவும், 1,563 பேருக்கும் மறுதேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் மோடி அரசு அறிவித்து இருந்தது.
அதன்படி 7 மையங்களில் நீட் மறு தேர்வு கடந்த ஞாயிறன்று (ஜூன் 23) நடை பெற்றது. அதில் கருணை மதிப்பெண் கள் ரத்து செய்யப்பட்ட 1,563 பேரில் 813 பேர் மட்டுமே பங்கேற்றதாக தேசிய தேர்வு கள் முகமை அறிவித்தது. இந்நிலையில், நீட் மறுதேர்வு முடிவுகள் திங்களன்று வெளியாயின.
இந்நிலையில், மறுதேர்வின் முடிவு மூலம் முதலிடம் பெற்றோர் எண்ணிக்கை 61 ஆக குறைந்துள்ளது. பழைய பட்டிய லில் 67 பேர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று இருந்த நிலையில், தற்போது அது 61 ஆக குறைந்துள்ளது. கருணை மதிப்பெண்கள் மூலம் முழு மதிப்பெண் கள் பெற்ற 6 பேர் மறுதேர்வு எழுத தகுதி பெற்ற நிலையில், 5 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மறுதேர்வு எழுதிய 5 பேரும் 680 மதிப்பெண்கள் வரை மட்டுமே பெற்ற தால் முதலிடம் பெற்றோர் எண்ணிக்கை 61 ஆக குறைந்தது என்பது குறிப்பிடத் தக்கது.